Published : 10 Aug 2025 06:57 AM
Last Updated : 10 Aug 2025 06:57 AM
புதுடெல்லி: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த 2024 - 2025-ம் நிதியாண்டில் ராணுவத் தளவாடங்களின் ஆண்டு உற்பத்தி இதுவரை இல்லாத அளவில் ரூ.1,50,590 கோடியாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டில் ராணுவத் தளவாட உற்பத்தி ரூ.1.27 லட்சம் கோடியாக இருந்தது. இது ஒரே ஆண்டில் 18 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த 2019-20-ம் ஆண்டில் ராணுவத் தளவாட உற்பத்தி ரூ. 79,071 கோடியாக இருந்தது. இது கடந்த 5 ஆண்டுகளில் 90 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீ்ழ், ராணுவத் தளவாட தயாரிப்பில் தற்சார்பு நடவடிக்கைக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்ததால், இந்த சாதனையை படைக்க முடிந்தது. இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT