Published : 08 Aug 2025 08:10 AM
Last Updated : 08 Aug 2025 08:10 AM

மகாராஷ்டிரா தேர்தலில் வாக்குகளை திருடுவதற்கு பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்​லி​யில் காங்​கிரஸ் தலைமை அலு​வல​கத்​தில் நேற்று பத்​திரி​கை​யாளர்​களை ராகுல் காந்தி சந்​தித்​தார். அப்​போது, மகா​ராஷ்டிர தேர்​தலில் முறை​கேடு​கள்​ நடந்​துள்​ள​தாக புகார்​ தெரி​வித்​தார்​. | படம்​: பிடிஐ |

புதுடெல்லி: “மகா​ராஷ்டிர தேர்​தலில் வாக்குகளை திருடுவதற்கு பாஜக.வுடன் தேர்​தல் ஆணை​ய​மும் கூட்டு சேர்ந்​துள்​ளது” என்று மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி குற்​றம் சாட்​டி​யுள்​ளார்.

இதுகுறித்து ராகுல் காந்தி நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: மகா​ராஷ்டிர தேர்​தலில் வாக்​காளர் பட்​டியலை அளிக்க தேர்​தல் ஆணை​யம் மறுத்​து​விட்​டது. மகா​ராஷ்டிர சட்​டப்​பேர​வைத் தேர்​தலின் போது மாலை 5.30 மணிக்கு மேல் வாக்​குப் பதிவு வழக்​கத்​துக்கு மாறாக அதி​கரித்​துள்​ளது. இவை எல்​லாம் பெரும் சந்​தேகத்​தை​யும் தேர்​தல் ஆணைய நடை​முறை​யின் நம்பகத்தன்​மை​யும் கேள்விக் குறி​யாக்​கு​கின்​றன.

மகாராஷ்டி​ரா​வில் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் எங்​கள் கூட்​டணி தோல்வி அடைந்​தது. அதே​நேரத்​தில் மக்​கள​வைத் தேர்​தலில் மகா​ராஷ்டி​ரா​வில் எங்​கள் கூட்​டணி அமோக வெற்றி பெற்​றது. இது​வும் பெரும் சந்​தேகத்தை ஏற்​படுத்​துகிறது. இந்த 2 தேர்தலுக்கும் இடைப்​பட்ட காலத்​தில் ஒரு கோடிக்​கும் அதி​க​மாக புதிய வாக்​காளர்​கள் சேர்ந்​துள்​ளனர். இதுகுறித்து தேர்​தல் ஆணை​யத்​திடம் புகார் தெரி​வித்​தோம்.

மகா​ராஷ்டி​ரா​வில் உள்ள 48 மக்​களவை தொகு​தி​யில் இண்​டியா கூட்​டணி கட்​சிகள் 30 இடங்​களை கைப்​பற்​றின. ஆனால், சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 50 இடங்​களை கூட இண்​டியா கூட்​ட​ணி​யால் பிடிக்க முடிய​வில்​லை. இது பெரும் சந்​தேகத்தை எழுப்​பு​கிறது. இதே​போல் கர்​நாடக தேர்​தலிலும் முறை​கேடு​கள் நடை​பெற்​றுள்​ளது விசா​ரணை​யில் தெரிய வரு​கிறது.

மகா​ராஷ்டிர தேர்​தலில் வாக்​காளர் பட்​டியலை வெளி​யிடு​வ​தில் தேர்​தல் ஆணை​யத்​துக்கு என்ன பிரச்​சினை? வாக்​காளர் பட்டியல் என்​பது இந்த நாட்​டின் சொத்​து. அதை வழங்க தேர்​தல் ஆணை​யம் மறுக்​கிறது. மேலும், மகா​ராஷ்டி​ரா​வில் வாக்​குப் பதிவு நடை​பெற்ற தினத்​தில் சிசிடிவி கேமரா பதிவு​களை அழிக்க தேர்​தல் ஆணை​யம் முயற்​சித்​தது.

இது மிகப் பெரிய சந்​தேகத்தை ஏற்​படுத்​துகிறது. தேர்​தல் தினத்​தன்று வாக்​குச் சாவடிகளில் மாலை 5.30 மணிக்கு மேல் கூட்​டம் இல்லை என்று காங்​கிரஸ் நிர்​வாகி​கள் கூறுகின்​றனர். மாலை 5.30 மணிக்கு மேல் அளவுக்​க​தி​க​மாக வாக்​குப் பதிவு நடை​பெறவில்லை என்று உறு​தி​யாக கூறுகின்​றனர். இந்த 2 விஷ​யங்​களும் பாஜக.வுடன் தேர்​தல் ஆணை​யம் இணைந்து மகா​ராஷ்டிர தேர்​தலில் வாக்குகளை திருடி​விட்டன என்ற சந்​தேகம் எழுகிறது. இவ்​வாறு ராகுல் காந்தி கூறி​னார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x