Published : 08 Aug 2025 08:03 AM
Last Updated : 08 Aug 2025 08:03 AM

உத்தராகண்ட் வெள்ளத்தில் சிக்கிய 274 பேர் மீட்பு: 59 பேரை தேடும் பணி தீவிரம்

கடந்த 5-ம் தேதி உத்தராகண்டில் மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் தரளி கிராமம் முழுமையாக அழிந்தது. அந்த கிராமத்தில் பல்வேறு வீடுகள் வெள்ளம், சகதியில் மூழ்கியுள்ளன. | படம்: பிடிஐ |

டேராடூன்: உத்​த​ராகண்ட் பெரு​வெள்​ளத்​தில் சிக்​கிய 274 பேர் பத்​திர​மாக மீட்​கப்​பட்டு உள்​ளனர். 9 ராணுவ வீரர்​கள் உட்பட 59 பேரை காண​வில்​லை. அவர்​களை தேடும் பணி தீவிரப்​படுத்​தப்​பட்டு உள்​ளது. உத்​த​ராகண்​டில் கங்​கோத்ரி கோயிலுக்கு செல்​லும் வழி​யில் தரளி கிராமம் அமைந்​துள்​ளது. இமயமலை​யில் சுமார் 10,200 அடி உயரத்​தில் உள்ள இந்த கிராமத்​தில் கடந்த 5-ம் தேதி மேகவெடிப்​பால் பெரு​வெள்​ளம் ஏற்​பட்​டது.

கீர் கங்கா நதி​யில் கரைபுரண்ட வெள்​ளத்​தால் தரளி கிராமம் வெள்​ளத்​தில் அடித்​துச் செல்​லப்​பட்​டது. இதில் 5 பேர் உயி​ரிழந்​தனர். ஏராள​மானோர் காயமடைந்​தனர்.ராணுவம், விமானப் படை, தேசிய, மாநில பேரிடர் மீட்​புப் படைகள், மாநில காவல் துறை இணைந்து இரவு பகலாக தரளி கிராமத்​தில் மீட்​புப் பணி​யில் ஈடு​பட்டு உள்​ளன. வெள்ள பாதிப்​பு​களால் ஆங்​காங்கே சிக்​கித் தவித்த 274 சுற்​றுலா பயணி​கள் பத்​திர​மாக மீட்​கப்​பட்டு உள்​ளனர். 9 ராணுவ வீரர்​கள் உட்பட 59 பேரை காண​வில்​லை. அவர்​களை தேடும் பணி தீவிரப்​படுத்​தப்​பட்டு உள்​ளது.

முதல்​வர் ஆய்வு: உத்​த​ராகண்ட் முதல்​வர் புஷ்கர் சிங் தாமி கடந்த சில நாட்​களாக பாதிக்​கப்​பட்ட பகு​தி​களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி வரு​கிறார். அவர் நேற்று பவுரி கர்​வால் பகு​தி​யில் ஆய்வு நடத்​தி​னார். அவர் கூறும்​போது, “வெள்​ளத்​தால் பாதிக்​கப்பட்ட மக்​களுக்கு தேவை​யான நிவாரண உதவி​கள், மருத்​துவ உதவி​கள் வழங்​கப்​படும். போர்க்​கால அடிப்​படை​யில் மீட்​புப் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன” என்று தெரி​வித்​தார்.

தரளி கிராமத்​தின் பெரு​வெள்ள பாதிப்பு குறித்து மீட்​புப் படை வட்​டாரங்​கள் கூறிய​தாவது: கங்​கோத்ரி கோயிலுக்கு செல்​லும் வழி என்​ப​தால் தரளி கிராமத்​தில் நூற்​றுக்​கணக்​கான ஓட்​டல்​கள், தங்​கும் விடு​தி​கள் செயல்​படு​கின்​றன. கடந்த 5-ம் தேதி ஏற்​பட்ட பெரு​வெள்​ளத்​தில் 30 ஓட்​டல்​கள், 25 தங்​கும் விடு​தி​கள் தரைமட்​ட​மாகி உள்​ளன. 50 வீடு​களும் முழு​மை​யாக சேதமடைந் திருக்கிறது. குடிநீர், மின்​சா​ரம், இணைய சேவை கட்​டமைப்​பு​கள் அழிந்து தரளி கிராமம் தனித்​தீ​வாக மாறி​யிருக்​கிறது.

இப்​போதைக்கு காணா​மல் போனவர்​களை தேடும் பணி தீவிரப்​படுத்​தப்​பட்டு உள்​ளது. சுமார் 30 அடி உயரத்​துக்கு சகதி தேங்கி உள்​ளது. மோப்ப நாய்​களின் உதவி​யுடன் பெரு​வெள்​ளம் பாய்ந்த பகு​தி​களில் தேடு​தல் பணி தீவிர​மாக நடை​பெற்று வரு​கிறது. தரளி கிராமத்​தின் சாலைகளை சீரமைத்​து, குடிநீர், மின்​சா​ரம், இணைய சேவை​களை மீண்​டும் தொடங்க நடவடிக்கை எடுத்து வரு​கிறோம். இவ்​வாறு மீட்​புப் படை வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

சுற்​றுச்​சூழல் ஆர்​வலர்​கள் கூறிய​தாவது: கடந்த 2013-ம் ஆண்​டில் கேதார்​நாத்​தில் ஏற்​பட்ட இயற்கை பேரிட​ரால் 6,000-க்​கும் மேற்பட்​டோர் உயி​ரிழந்​தனர். ஆனால் அதன்​பிறகும் உத்​த​ராகண்​டில் நதி​கள் உள்​ளிட்ட நீர்​வழித்​தடங்​களை ஆக்​கிரமித்து வணிக கட்டிடங்​கள் கட்​டப்​பட்டு வரு​கின்​றன.

உத்​த​ராகண்ட் மாநிலம் முழு​வதும் சுமார் 3,000-க்​கும் மேற்​பட்ட கிராமங்​கள் மேகவெடிப்​பு, நிலச்​சரிவு அபா​யத்​தில் உள்​ளன. அந்த கிராமங்​களில் முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வேண்​டும். குறிப்​பாக பக்​தர்​கள் அதி​கம் கூடும் பத்​ரி​நாத், கேதார்​நாத், கங்​கோத்​ரி, யமுனோத்ரி ஆகிய புனித தலங்​களில் இயற்கை பேரிடர்​களை தடுப்​ப​தற்​கான நடவடிக்​கைகளை மேற்கொள்​ள வேண்​டும்​. இவ்​வாறு சுற்​றுச்​சூழல்​ ஆர்​வலர்​கள்​ அறிவுறுத்தி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x