Published : 08 Aug 2025 07:07 AM
Last Updated : 08 Aug 2025 07:07 AM

ரூ.730 கோடி ஜிஎஸ்டி மோசடி வழக்கு: 12 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

புதுடெல்லி: ரூ.730 கோடி ஜிஎஸ்டி மோசடி வழக்​கில் ஜார்க்​கண்ட், மேற்கு வங்​கம் மற்​றும் மகா​ராஷ்டி​ரா​வில் 12 இடங்​களில் அமலாக்கத் துறை அதி​காரி​கள் நேற்று சோதனை நடத்​தினர்.

ஜார்க்​கண்ட் மாநிலத்​தில் போலி நிறு​வனங்​கள் பெயரில் சுமார் ரூ.5,000 கோடிக்கு போலி ரசீது (இன்​வாய்​ஸ்) தயாரித்து முறை​கேடான வழி​யில் ரூ.730 கோடிக்கு மேல் `இன்​புட் டாக்ஸ் கிரெடிட்' பெற்​றதன் மூலம் அரசுக்கு ஜிஎஸ்டி வரு​வாய் இழப்பு ஏற்படுத்தப்​பட்​டுள்​ளது.

இதில் முக்​கிய குற்​ற​வாளி​யான சிவகு​மார் தியோரா கடந்த மே மாதம் கைது செய்​யப்​பட்​டார். அவர் மீது கடந்த மாதம் குற்றப்பத்திரிகை தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த வழக்​கில் அமலாக்​கத் துறை கடந்த மே மாதம் முதல் சுற்று சோதனை நடத்தியது.

இந்​நிலை​யில் சிவகு​மார் தியோ​ரா​விடம் நடத்​திய விசா​ரணை​யில் இந்த முறை​கேட்​டில் கூடு​தல் நபர்​கள் மற்​றும் நிறு​வனங்களுக்கு தொடர்பு இருப்​பது தெரிய​வந்​தது.

இது தொடர்​பான புதிய மற்​றும் நம்​பத்​தகுந்த ஆதா​ரங்​களின் அடிப்​படை​யில் அமலாக்க துறை நேற்று 12 இடங்​களில் சோதனை நடத்​தி​யது. ஜார்க்​கண்ட், மேற்கு வங்​கம் மற்​றும் மகா​ராஷ்டி​ரா​வில் இந்த சோதனை நடை​பெற்​றது. இதில் ஆவணங்​கள் பறி​முதல் மற்​றும் கைது நடவடிக்கை ஏதேனும் மேற்​கொள்​ளப்​பட்​டதா என்ற விவரத்தை அமலாக்​கத் துறை பகிர்ந்து கொள்​ள​வில்​லை.

என்​றாலும் விசா​ரணை தொடர்​வ​தாக தெரி​வித்​துள்​ளது. முறை​கேட்​டில் பிற தொடர்​பு​கள் உறு​தி​யான பிறகு அது தொடர்​பான தகவல்​களை அமலாக்​கத் துறை பகிர்ந்​து​கொள்​ளும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இதுகுறித்து அதி​காரி ஒரு​வர் கூறுகை​யில், “வரி மோசடி வழக்​கு​களில் போலி ரசீதுகள் மற்​றும் போலி நிறு​வனங்​களை பயன்​படுத்து​வது பொது​வான நடை​முறை​யாக உரு​வெடுத்துள்​ளது. என்​றாலும் நிதி கண்​காணிப்பு நடை​முறையை தீவிரப்படுத்துவதன் அவசி​யத்தை இந்த வழக்​கு நமக்​கு உணர்த்துகிறது” என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x