Published : 07 Aug 2025 07:45 AM
Last Updated : 07 Aug 2025 07:45 AM

எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பங்கேற்க சீனா செல்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் மோடி, சீனாவுக்கு இம்மாதம் 31-ம் தேதி செல்கிறார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (எஸ்சிஓ) சீனா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், ஈரான், மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. சீனாவின் டியான்ஜின் நகரில் இம்மாதம் 31-ம் தேதி முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை நடைபெறும் எஸ்சிஓ உச்சி மாநாட்டுக்கு சீனா தலைமை தாங்குகிறது.

இம்மாதம் 30-ம்​ தேதி ஜப்​பான்​ செல்​லும்​ பிரதமர்​ மோடி, ஆண்​டுதோறும்​ நடத்​தப்​படும்​ இந்​தி​யா - ஜப்​பான்​ உச்​சி மா​நாட்​டில்​ பங்​கேற்​கிறார்​. இதில்​ ஜப்​பான்​ பிரதமர்​ ஃபுமியோ கிஷி​டா கலந்​து
கொள்​கிறார்​. இந்​த மா​நாட்​டை முடித்​துக்​ கொண்​டு பிரதமர்​ மோடி 31-ம்​ தேதி சீனா செல்​கிறார்​. டியான்​ஜின்​ நகரில்​ நடை​பெறும்​ எஸ்​சிஓ உச்​சி மா​நாட்​டில்​ பிரதமர்​ மோடி பங்​கேற்​கிறார்​. கடந்​த 2019-ம்​ ஆண்​டுக்​குப்​பின்​ பிரதமர்​ மோடி சீனா செல்​வது இது​வே முதல்​ முறை.

உச்​சி மா​நாட்​டுக்​கு முன்​ சீனா​வில்​ நடை​பெற்​ற எஸ்​சிஓ தொடர்​ கூட்​டங்​களில்​ பாது​காப்​புத்​ துறை அமைச்​சர்​ ராஜ்​நாத்​ சிங்​, வெளி​யுறவுத்​துறை அமைச்​சர்​ ஜெய்​சங்​கர்​ ஆகியோர்​ கலந்​து கொண்​டனர்​. அப்​போது சீன அதிபர்​ ஜி ஜின்​பிங்​கை​யும்​, அமைச்​சர்​ ஜெய்​சங்​கர்​ சந்​தித்​தார்​.

சீனா​வில்​ கச்​சா எண்​ணெய்​ வாங்​கு​வதற்​காக, இந்​தி​யா உட்​பட பிரிக்​ஸ்​ நாடு​களை, அமெரிக்​க அதிபர்​ ட்ரம்ப்​ குறிவைக்​கும்​ வேளை​யில்​ பிரதமர்​ மோடி சீனா​வுக்​கு செல்​கிறார்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x