Published : 06 Aug 2025 09:04 AM
Last Updated : 06 Aug 2025 09:04 AM

மாணவர்களுடன் இந்த ஆண்டு நடைபெற்ற பிரதமர் மோடியின் நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்தது

புதுடெல்லி: கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஆண்​டு​தோறும் ‘பரிக் ஷா பே சர்ச்​சா' என்ற நிகழ்ச்சி டெல்​லி​யில் நடை​பெறுகிறது. ஜனவரி அல்​லது பிப்​ர​வரி மாதங்​களில் நடை​பெறும் இந்​நிகழ்ச்​சி​யில் பள்​ளி, கல்​லூரி மாணவர்​கள், பெற்​றோர்கள், கல்வியாளர்களுடன் நேரடி​யாக​வும் காணொலி வாயி​லாக​வும் பிரதமர் மோடி கலந்​துரை​யாடி வரு​கிறார். மாணவர்​கள் தேர்வை சுமை​யாக கரு​தாமல், கற்​றலின் கொண்​டாட்​ட​மாக கருத வேண்​டும் என்​பது​தான் இந்​நிகழ்ச்​சி​யின் நோக்​கம்.

அந்த வகை​யில் இந்த ஆண்டு தொடக்​கத்​தில் நடை​பெற்ற இந்​நிகழ்ச்​சிக்​கு, ‘மை​கவ்' இணை​யதளத்​தில் ஒரே மாதத்​தில் 3.53 கோடி பேர் பதிவு செய்​திருந்​தனர். அத்​துடன் பல்​வேறு ஊடகங்​களில் இந்​நிகழ்ச்​சியை 21 கோடி பேர் பார்த்​தனர். இதன்​மூலம் பொது​மக்​கள் பயன்​பாட்டு இணை​யதளத்​தில் ஒரே மாதத்​தில் அதி​கம் பேர் பதிவு செய்த காரணத்​துக்​காக இந்த நிகழ்ச்சி புதிய கின்​னஸ் சாதனை படைத்​துள்​ளது.

டெல்​லி​யில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், கின்​னஸ் அமைப்​பின் நடு​வர் ரிஷி​நாத் உலக சாதனைக்​கான சான்​றிதழை வழங்​கி​னார். இந்​நிகழ்ச்​சி​யில், மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான், தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ், இணை​யமைச்​சர் ஜிதின் பிர​சா​தா, பள்​ளிக் கல்​வித் துறை செய​லா​ளர் சஞ்​சய் குமார்​ ஆகியோர்​ பங்​கேற்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x