Last Updated : 06 Aug, 2025 08:31 AM

 

Published : 06 Aug 2025 08:31 AM
Last Updated : 06 Aug 2025 08:31 AM

உ.பி.யில் அரசு நில ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கை: யாதவர், முஸ்லிம்களுக்கு எதிரான சுற்றறிக்கையை ரத்து செய்தார் முதல்வர் யோகி ஆதித்யநாத்

புதுடெல்லி: உத்தர பிரதேசத்​தில் அரசு நில ஆக்​கிரமிப்பை அகற்​றும் நடவடிக்​கை​யில், யாதவர், முஸ்​லிம்​களுக்கு எதி​ரான சுற்றறிக்​கையை முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் ரத்து செய்​துள்​ளார். உத்தர பிரதேசத்​தில் முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் தலைமையிலான ஆட்சி அமைந்​தது முதல் அரசு நில ஆக்​கிரமிப்​பு​கள் அகற்​றப்​பட்டு வரு​கின்​றன. 57,000-க்​கும் மேற்​பட்ட கிராம பஞ்​சா​யத்​துகளில் அரசு பொது நிலங்​கள் உள்​ளன. இவற்​றில், கிராம சபை நிலம், குளங்​கள், கொட்​டகைகள், உரக் குழிகள், தகன மைதானங்​கள் உள்​ளிட்ட ஆக்​கிரமிப்​பு​கள் அகற்​றப்​பட்டு வரு​கின்​றன.

இந்த நடவடிக்​கைக்​காக, பஞ்​சா​யத்து ராஜ் துறை​யின் தலைமை அலு​வலக இணை இயக்​குநர் சார்​பில் ஒரு சுற்​றறிக்கை பிறப்​பிக்கப்​பட்​டது. அது அனைத்து 75 மாவட்ட ஆட்​சி​யர்​கள், அரசு நில நிர்​வாகப் பிரிவு துணை இயக்​குநர்​கள் மற்​றும் மாவட்ட பஞ்சாயத்து ராஜ் அதி​காரி​களுக்கு அனுப்​பப்​பட்​டது. அதில், யாதவர்​கள், முஸ்​லிம்​களின் நில ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற வேண்​டும் என குறிப்​பிடப்​பட்​டிருந்​தது. இது தொடர்​பாக முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத்​துக்கு புகார் மனுக்​கள் வந்​தன.

இதுகுறித்து முதல்​வர் யோகி கூறுகை​யில், ‘பாரபட்​ச​மான மற்​றும் ஏற்​றுக்​கொள்ள முடி​யாத இந்த உத்​தரவை உடனடி​யாக ரத்து செய்ய உத்​தர​விடு​கிறேன். இந்த உத்​தரவை பிறப்​பித்த பஞ்​ச​யத்து ராஜ் துறை​யின் இணை இயக்​குநர் சுரேந்​திர நாத் சிங் பணியிடைநீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளார். அரசி​யலமைப்​பின் சாரத்​திற்கு எதி​ராக, எந்த ஒரு சமூகத்​துக்​கும் அல்​லது மதத்​தினருக்​கும் எதி​ராக உத்​தரவு பிறப்​பிப்​பது அரசின் கொள்​கைகளுக்கு எதி​ரானவை.

எதிர்​காலத்​தில் சமூக நல்​லிணக்​கத்தை பாதிக்​கக்​கூடிய அத்​தகைய மொழியை எந்த அரசு கடிதப் பரி​மாற்​றத்​தி​லும் பயன்​படுத் தக்​கூ​டாது. அரசின் சார்​பாக எந்​தவொரு முடிவை​யும் எடுக்​கும்​போது, அரசி​யலமைப்பு மதிப்​பு​கள், பாரபட்​சமற்ற தன்மை மற்​றும் நிர்​வாக ஒழுக்​கம் ஆகிய​வற்றை முழு​மை​யாகப் பின்​பற்ற வேண்​டும். இல்​லா​விட்​டால் சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​கள் மீது கடும் நடவடிக்​கை எடுக்​கப்​படும்​’’ என எச்​சரித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x