Published : 05 Aug 2025 07:39 AM
Last Updated : 05 Aug 2025 07:39 AM

ம.பி.யில் மதம் மாற மறுத்த இளம்பெண் கழுத்து அறுத்து கொலை

ஷேக் ரயீஸ், பாக்யஸ்ரீ நம்தே தனுக்

புர்ஹான்பூர்: மத்​திய பிரதேச மாநிலம் நவாரா பகு​தி​யில் நேபா நகர் போலீஸ் நிலைய எல்​லைக்குட்​பட்ட பகு​தி​யில் வசித்​தவர் பாக்யஸ்ரீ நம்தே தனுக் (35). இவரை முஸ்​லிமாக மதம் மாறி தன்னை திரு​மணம் செய்துகொள்ள வேண்​டும் என்று ஷேக் ரயீஸ் (42) என்​பவர் கட்​டாயப்​படுத்தி வந்​துள்​ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்​நிலை​யில், பாக்​யஸ்ரீ வீட்​டில் இருந்தபோது ஷேக் ரயீஸ் நேற்​று​முன்​தினம் இரவு திடீரென உள்ளே நுழைந்​தார். பின்​னர் கத்தியால் அவரது கழுத்தை அறுத்​தார். அத்​துடன் பல முறை கத்​தி​யால் குத்​தி​விட்டு தப்​பியோடி​னார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீ​ஸார் உடலை கைப்​பற்றி பிரதேச பரிசோதனைக்​காக அனுப்பி வைத்​தனர். பின்​னர் தீவிர தேடு​தல் வேட்டை நடத்தி சில மணி நேரங்​களில் ஷேக் ரயீஸை கைது செய்​தனர்.

இதுகுறித்து புர்​ஹான்​பூர் போலீஸ் கூடு​தல் எஸ்பி அன்​தர் சிங் கனேஷ் கூறுகை​யில், ‘‘கைது செய்​யப்​பட்ட ஷேக் ரயீஸ் மீது கொலை, சித்​ர​வதை உட்பட பல பிரிவு​களின் கீழ் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. தற்​போது அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்​டுள்​ளார்’’ என்​றார்.

இதுகுறித்து பாக்​யஸ்ரீ சகோ​தரி சுபத்ரா பாய் கூறும்​போது, ‘‘என் சகோ​தரி பாக்​யஸ்ரீ​யின் தலை​முடியை இழுத்து சென்று ஷேக்ரயீஸ் அடித்து உதைத்​தார். மதம் மாற சொல்லி கட்​டாயப்​படுத்​தி​னார். அத்​துடன் திரு​மணம் செய்து கொள்ள வேண்​டும் என்று நீண்ட நாட்​களாகவே சித்​ர​வதை செய்து வந்​தார். அதற்கு பாக்​யஸ்ரீ ஒப்​புக் கொள்​ள​வில்​லை’’ என்​றாா்.

இந்நிலையில், பாக்​யஸ்ரீக்கு நியா​யம் கிடைக்க வேண்​டும். குற்​ற​வாளி தண்​டிக்​கப்பட வேண்​டும் என்று வலி​யுறுத்தி இந்​துக்​கள் போராட்​டம் நடத்​தினர். அதற்கு தலைமை வகித்த அமித் வருடே கூறும்​போது, ‘‘இது லவ் ஜிகாத் சம்​பவம். கடந்த 4 நாட்​களுக்கு முன்பே ஷேக் ரயீஸ் சித்​ர​வதை குறித்து பாக்​யஸ்ரீ போலீ​ஸில் புகார் அளித்​துள்​ளார்.

ஆனால், போலீ​ஸார் நடவடிக்கை எது​வும் எடுக்​க​வில்​லை. மேலும், குற்​றம் சாட்​டப்​பட்ட ஷேக் ரயீஸை போலீ​ஸார் விடு​வித்துள்ளனர். எனவே, அலட்​சி​ய​மாக இருந்த போலீஸ் அதி​காரி​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும். குற்​ற​வாளி ஷேக்கைதூக்கி​லிட வேண்​டும்’’ என்று கூறி​னார்.

ம.பி. முன்​னாள் கேபினட் அமைச்​சர் அர்ச்​சனா சிட்​னிஸ், பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினரை சந்​தித்து ஆறு​தல் தெரி​வித்​தார். அத்துடன், அலட்​சி​ய​மாக செயல்​பட்ட போலீஸ் அதி​காரி​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று வலி​யுறுத்​தி​னார். இதற்கிடை​யில், ஷேக் ரயீஸ் அரசு நிலத்தை ஆக்​கிரமித்​திருப்​பதும், சட்​ட​விரோத செயல்​களில் ஈடு​பட்டு வந்​ததும் கண்​டு பிடிக்கப்​பட்​டுள்​ளது. ஆக்​கிரமித்​துள்ள இடங்​களை பறி​முதல்​ செய்​ய அதி​காரி​கள்​ நடவடிக்​கை எடுத்​து வருகின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x