Published : 04 Aug 2025 07:43 AM
Last Updated : 04 Aug 2025 07:43 AM

உ.பி.யில் வீட்டுக்குள் புகுந்த கங்கை நீரில் பால் ஊற்றி புனித நீராடிய போலீஸ் அதிகாரி

பிரயாக்ராஜ்: உத்தர பிரதேசம் உள்​ளிட்ட வட மாநிலங்​களில் பெய்து வரும் கனமழை காரண​மாக கங்​கை, யமுனை நதி​களில் வெள்​ளப் பெருக்கு ஏற்​பட்​டுள்​ளது. இதனால் பிர​யாக்​ராஜ் நகரின் தாராகஞ்ச், ராஜாபூர், சலோரி உள்​ளிட்ட தாழ்​வான பகு​தி​கள் வெள்​ளத்​தில் மூழ்கி உள்​ளன. 1,400 பேர் அங்​கிருந்து அப்​புறப்​படுத்​தப்​பட்டு பாது​காப்​பான இடங்​களில் அமைக்​கப்​பட்​டுள்ள நிவாரண முகாம்​களில் தங்க வைக்​கப்​பட்​டுள்​ளனர்.

இதனிடையே, மாநில காவல் துறை​யில் உதவி ஆய்​வாள​ராக பணி​யாற்​றும் சந்​திரதீப் நிஷாத் சமூக வலை​தளத்​தில் சில வீடியோக்​களை பகிர்ந்​துள்​ளார். அத்​துடன், “இன்று காலை (நேற்​று) பணிக்கு புறப்​பட்​ட​போது, தாய் கங்கா என் வீட்​டுக்கு வந்​திருந்​தார். என் வீட்டு வாசலிலேயே அவரை வணங்கி ஆசி பெற்​றேன்’’ என பதி​விட்​டுள்​ளார்.

ஒரு வீடியோ​வில் சீருடை​யில் இருக்​கும் நிஷாத், தன் வீட்டு வாசலில் சூழ்ந்​துள்ள கங்கை வெள்​ளத்​தில் ரோஜா இதழ்​களை தூவு​கிறார். பின்​னர் பால் ஊற்​றுகிறார். மற்​றொரு வீடியோ​வில், நிஷாத் மேலாடை இல்​லாமல் இடுப்​பளவு தண்​ணீர் இறங்கி கங்கை தாயை வணங்​கியபடி புனித நீராடு​கிறார். இந்த வீடியோக்​கள் வைரலாக பகிரப்​பட்​டு வரு​கின்​றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x