Published : 02 Aug 2025 07:27 AM
Last Updated : 02 Aug 2025 07:27 AM
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், காமாரெட்டி மாவட்டத்தில் 161-வது தேசிய நெடுஞ்சாலையில் பிட்லம் எனும் ஊரிலிருந்துயட்னூரு எனும் இடத்துக்கு ஒரு லாரி நேற்று சென்று கொண்டிருந்தது.
அப்போது லாரியின் கேபினில் 4 பேர் அமர்ந்திருந்தனர். லாரி ஒரு பாலத்தின் மீது செல்லும்போது, ஸ்டியரிங்கை திருப்ப முடியாமல் லாரி ஓட்டுநர் சாலையில் குதித்து உயிர் தப்பினார்.
ஆனால், லாரி பாலத்தின் தடுப்பு சுவரின் மீது மோதி அந்தரத்தில் நின்றது. அதே சமயத்தில் லாரியின் கேபினில் இருந்த 4 பேரும் 20 மீட்டர் கீழே உள்ள சர்வீஸ் சாலையில் விழுந்தனர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மீதமுள்ள மூவரும் மருத்துவமனையில் உயிரிழந்தனர். தலைமறைவான லாரி ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT