Published : 01 Aug 2025 07:41 AM
Last Updated : 01 Aug 2025 07:41 AM

மணிப்பூரில் 4 தீவிரவாதிகள் கைது: 26 துப்பாக்கிகள் பறிமுதல்

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் பல்​வேறு தீவிர​வாத அமைப்​பு​களுக்கு எதி​ராக தேடு​தல் வேட்​டை, ஆயுதங்​கள் பறி​முதல் உள்ளிட்ட நடவடிக்​கை​களில் பாது​காப்பு படை​யினர் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில் மணிப்​பூரின் விஷ்ணுபூர், தவு​பால், மேற்கு இம்​பால், கிழக்கு இம்​பால் ஆகிய மாவட்​டங்​களில் ஒப்​பந்​த​தா​ரர்​கள், தொழில​திபர்​கள் மற்​றும் பொது மக்​களிடம் அச்​சுறுத்தி பணம் பறித்​த​தாக 3 தடை செய்​யப்​பட்ட அமைப்​பு​களை சேர்ந்த 4 தீவிர​வா​தி​கள் உள்​ளிட்ட 5 பேரை பாது​காப்பு படை​யினர் நேற்று முன்​தினம் கைது செய்​தனர்.

நான்கு தீவிர​வா​தி​களும், மக்​கள் விடு​தலைப் படை, காங்​லீ​பாக் கம்​யூனிஸ்ட் கட்​சி, ப்ரீபக் (புரோ) ஆகிய 3 அமைப்​பு​களை சேர்ந்தவர்​கள். இதற்​கிடை​யில் சூரசந்த்​பூர் மற்​றும் தவு​பால் மாவட்​டத்​தில் பாது​காப்பு படை​யினர் வெவ்​வேறு நடவடிக்​கை​களில் 26 துப்​பாக்​கி​கள், 9 வெடிபொருட்​கள் மற்​றும் வெடிமருந்​துகளை நேற்று முன்​தினம்​ கைப்​பற்​றினர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x