Published : 01 Aug 2025 07:35 AM
Last Updated : 01 Aug 2025 07:35 AM

அமர்நாத் யாத்திரையில் 4 லட்சம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்தனர்

ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீர் இமயமலை​யில், கடல் மட்​டத்​தில் இருந்து 3,888 மீட்​டர் உயரத்​தில் அமர்​நாத் குகைக் கோயில் உள்​ளது. இங்கு இயற்​கை​யாக உரு​வாகும் பனி லிங்​கத்தை தரிசனம் செய்ய ஆண்​டு​தோறும் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் புனித யாத்​திரை செல்​கின்​றனர். இந்த ஆண்​டுக்​கான அமர்​நாத் புனித யாத்​திரை கடந்த ஜூலை 3-ம் தேதி தொடங்​கியது ஆகஸ்ட் 9-ம் தேதி வரை யாத்​திரை நடை​பெற உள்​ளது.

இந்​நிலை​யில் ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நேற்று வெளி​யிட்ட ‘எக்​ஸ்’ பதி​வில், “பாபா அமர்​நாத் சாத்​தி​யமற்​றதை சாத்​தி​ய​மாக்​கு​கிறார்.

அவரது ஆசிர்​வாதத்​தால், குகைக் கோயி​லில் தரிசனம் செய்த பக்​தர்​கள் எண்​ணிக்கை 4 லட்​சத்தை கடந்​துள்​ளது. இந்த அற்​புதத்​திற்​காக நான் சிவபெரு​மானை வணங்​கு​கிறேன். மேலும் புனித யாத்​திரையை பக்​தர்​களுக்கு ஒரு தெய்​வீக அனுபவ​மாக மாற்​று​வ​தில் பங்கு வகிக்​கும் அனை​வருக்​கும் நன்றி தெரிவிக்​கிறேன்” என்று கூறி​யுள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x