Published : 01 Aug 2025 05:02 AM
Last Updated : 01 Aug 2025 05:02 AM

குஜராத்தில் 3 மாதங்களாக டிஜிட்டல் கைது செய்து பெண் டாக்டரிடம் ரூ.19 கோடி சுருட்டிய கும்பல்

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தை சேர்ந்த மூத்த பெண் மருத்துவர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:

கடந்த மார்ச் 15 முதல் ஜூன் 25 வரையில் என்னுடைய செல்போனில் வாட்ஸ்-அப்பில் அழைத்த ஒரு பெண், தனது பெயர் ஜோதி விஸ்வநாத் என்றும் தொலைத்தொடர்புத் துறையில் இருந்து பேசுவதாகவும் கூறினார். இதுபோல காவல் துணை ஆய்வாளர் என மோகன் சிங் என்பவரும் அரசு வழக்கறிஞர்கள் எனக் கூறி மேலும் 3 பேரும் செல்போனில் அழைத்தனர்.

அப்போது, என்​னுடைய செல்​போனிலிருந்து ஆட்​சேபனைக்​குரிய தகவல்​கள் அனுப்​பப்​பட்​டுள்​ள​தாக அவர்​கள் அனை​வரும் கூறினர். என்​னுடைய ஆதார் எண்ணை கேட்​டனர். பின்​னர் என்​னுடைய வங்​கிக் கணக்கு பண மோசடி நடவடிக்​கைகளுக்​காக பயன்​படுத்​தப்​பட்​டுள்​ள​தாகக் கூறினர். மேலும் என் மீது அந்​நிய செலா​வணி நிர்​வாக சட்​டம் மற்​றும் சட்​ட​விரோத பணப்​பரிவர்த்​தனை தடுப்பு சட்​டத்​தின் கீழ் அமலாக்​கத் துறை வழக்கு பதிவு செய்​திருப்​ப​தாக​வும் அது தொடர்​பான ஆவணத்​தை​யும் அனுப்​பினர்.

வழக்​கி​லிருந்து தப்​பிக்க வேண்​டு​மா​னால் ரூ.20 கோடி தர வேண்டுமென தெரி​வித்​தனர். இதையடுத்​து, வங்​கி​யில் இருந்த வைப்​புத் தொகையை திரும்​பப் பெற்​றும் தங்க நகைகள், பங்​கு​கள் ஆகிய​வற்றை விற்​றும் ரூ.19 கோடியை அவர்​கள் கூறிய சுமார் 30 கணக்​குக்கு மாற்​றினேன். அதன் பிறகு​தான் டிஜிட்​டல் கைது மோசடி​யில் ஏமாற்​றப்​பட்​டோம் என்​பதை உணர்ந்து புகார் செய்​கிறேன். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

இந்​தப் புகாரின் பேரில் ஒரு​வரை போலீ​ஸார் கைது செய்​து வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x