Published : 01 Aug 2025 04:24 AM
Last Updated : 01 Aug 2025 04:24 AM

இந்தியப் பொருளாதாரம் செயலிழந்து விட்டது: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியது உண்மைதான் - ராகுல் காந்தி

புதுடெல்லி: இந்தியப் பொருளாதாரம் மடிந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடுமையான விமர்சனம் செய்த நிலையில் அது உண்மைதான் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

அமெரிக்கா-இந்தியா இடையே குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாததை யடுத்து, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும், அது இன்று முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

மேலும், ரஷ்யாவிடமிருந்து ராணுவ தளவாடங்கள். கச்சா எண்ணெய் வாங்குவதால் அபராதமும் விதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இந்த நிலை​யில், இந்​திய பொருளா​தா​ரம் செயலிழந்து விட்​டது என்ற கடுமை​யான விமர்​சனத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்​வைத்​துள்​ளார். வரி விதிப்பை அறி​வித்த சில மணி நேரங்​களில் ட்ரம்ப் இவ்​வாறு கூறி​யுள்​ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பதி​வில், ‘‘ரஷ்​யா​வுடன் இந்​தியா வைத்​துள்ள உறவு குறித்து எனக்கு கவலை இல்​லை. ஆனால், அமெரிக்க பொருட்​களுக்கு இந்​தியா விதிக்​கும் வரி​கள்​தான் உலகிலேயே மிக அதி​க​மாக உள்​ளது. எனவே​தான் அவர்​களு​டன் ஒப்​பீட்​டள​வில் சிறிய வணி​கத்​தையே செய்து வரு​கிறோம். அதே​நேரம், ரஷ்​யா​வுடன் அமெரிக்க வர்த்தக உறவு கொண்​ட​தில்​லை. இந்​தியா மற்​றும் ரஷ்​யா​வும் செயலிழந்து​போன தங்​களின் பொருளா​தா​ரங்​களை இன்​னும் நாச​மாக்​கட்​டும்” என்று கடுமை​யாக தெரி​வித்​துள்​ளார்.

இந்​நிலை​யில், இந்​திய பொருளா​தா​ரம் செயலிழந்து​போய்​விட்​டது என்று ட்ரம்ப் கூறிய கருத்து உண்​மை​யானது​தான் என்று ராகுல் காந்தி தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் நாடாளு​மன்​றத்​தில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இந்​திய பொருளா​தா​ரம் செயலிழந்து​விட்​டது என்​பது பிரதமர் நரேந்​திர மோடி மற்​றும் நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் ஆகியோரைத் தவிர நம் அனை​வருக்​கும் நன்​றாகவே தெரி​யும். பாஜக தலை​மையி​லான மத்​திய அரசு நாட்​டின் பொருளா​தா​ரம், பாது​காப்பு மற்​றும் வெளி​யுறவுக் கொள்​கைகளை முற்​றி​லும் அழித்​து​விட்​டது. இந்த உண்​மையை ட்ரம்ப் கூறிய​தில் எனக்கு மகிழ்ச்​சி. கோடீஸ்​வரர் கவுதம் அதானிக்கு உதவுவதற்​காக பாஜக இந்​திய பொருளா​தா​ரத்​தையே அழித்​து​விட்​டது.

ஒரு​புறம் நாங்​கள் ஒரு சிறந்த வெளி​யுறவுக் கொள்​கையை கொண்​டுள்​ளோம் என்று வெளி​யுறவு அமைச்​சர் உரை நிகழ்த்​துகிறார். மறு​புறம் அமெரிக்கா உங்​களை துஷ்பிரயோகம் செய்​கிறது. அடுத்து சீனா உங்​கள் பின்​னால் உள்​ளது. நீங்​கள் உலகம் முழு​வதும் பிர​தி​நி​தி​களை அனுப்​பும்​போது எந்​த​நாடும் பாகிஸ்​தானை கண்​டிக்​க​வில்​லை. நாட்டை எப்​படி வழிநடத்​து​வது என்று அவர்​களுக்கு தெரிய​வில்​லை.

இந்​தி​யா​விற்​கும் பாகிஸ்​தானுக்​கும் இடை​யில் போர் நிறுத்​தத்தை நான்​தான் செய்​தேன் என்று டிரம்ப் 30 முறை கூறி​யுள்​ளார். இந்​தி​யா​வின் ஐந்து விமானங்​கள் சுட்​டு​வீழ்த்​தப்​பட்​ட​தாக டிரம்ப் கூறி​னார். இப்​போது 25 சதவீத வரியை நிர்​ண​யிப்​பேன் என்று ட்ரம்ப் கூறுகிறார். பிரதமர் மோடி​யால் ஏன் இதற்கு பதிலளிக்க முடிய​வில்​லை? உண்​மை​யான காரணம் என்ன? யாருடைய கட்​டுப்​பாட்​டில் அதி​காரம் உள்​ளது? அதானி என்ற ஒரு நபருக்​காக மட்​டுமே பிரதமர் மோடி பணி​யாற்​றுகிறார். அதானிக்கு உதவ இந்​திய பொருளா​தா​ரத்தை அவர் முடிவுக்​கு கொண்​டு வந்​துள்​ளார்​. இவ்​வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x