Last Updated : 30 Jul, 2025 11:57 AM

1  

Published : 30 Jul 2025 11:57 AM
Last Updated : 30 Jul 2025 11:57 AM

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க மக்களவையில் தீர்மானம்

கோப்புப் படம்

புதுடெல்லி: மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்​களுக்கு நீ்ட்​டிக்க வகை செய்​யும் தீர்​மானத்தை மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா மக்களவையில் அறி​முகப்​படுத்த உள்ளார்.

வடகிழக்கு மாநில​மான மணிப்​பூரில் மைத்தேயி மற்​றும் குகி ஆகிய இரு இனக் குழுக்​களுக்கு இடையே கடந்த 2023-ம் ஆண்டு மே 3-ம் தேதி தொடங்​கிய மோதல் பெரும் வன்​முறை​யாக வெடித்​தது. இதில், 250 பேர் உயி​ரிழந்​ததுடன் 60,000-க்​கும் மேற்பட்டோர் தங்​கள் இருப்​பிடங்​களை விட்டு வெளி​யேறும் சூழல் ஏற்​பட்​டது.

கலவரத்தை கட்​டுப்​படுத்த முடி​யாத நிலை​யில் மணிப்​பூர் முதல்​வர் என்​.பிரேன் சிங் தனது பதவியை ராஜினமா செய்​வ​தாக அறிவித்​தார். இதையடுத்​து, கடந்த பிப்​ர​வரி 13 முதல் மணிப்​பூரில் குடியரசுத் தலை​வர் ஆட்சி அமல்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

இந்த நிலை​யில், மேலும், 6 மாதங்​களுக்கு குடியரசுத் தலை​வர் ஆட்​சியை நீ்ட்​டிக்க வகை செய்​யும் தீர்​மானத்தை மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா மக்களவையில் அறி​முகப்​படுத்த உள்ளார்.

இது தொடர்பாக மக்களவை அலுவல் பட்டியல் அறிக்கையில், அரசி​யலமைப்​புச் சட்​டப் பிரிவு 356-ன் கீழ் மணிப்​பூர் மாநிலத்​தில் 2025, பிப்​ர​வரி 13-ல் பிரகடனம் செய்​யப்​பட்ட குடியரசுத் தலை​வர் ஆட்​சி 2025, ஆகஸ்ட் 13 முதல் மேலும் 6 மாதங்​களுக்குத் தொடர்ந்து நீட்​டிக்கப்படுவதை இந்த அவை அங்கீகரிக்கிறது என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

ஒரு மாநிலத்​தில் அமல்​படுத்​தப்​படும் குடியரசுத் தலை​வர் ஆட்சி வழக்​க​மாக 6 மாதங்​கள் வரை நீ​டிக்​கும். ஆனாலும் இதனை, நாடாளு​மன்​றத்​தின் ஒப்​புதலுடன் ஒவ்​வொரு ஆறு மாத காலத்​துக்​கும் 3 ஆண்​டு​கள் வரை நீடிக்​க முடி​யும்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x