Published : 25 Jul 2025 07:44 AM
Last Updated : 25 Jul 2025 07:44 AM
மண்டி: இமாச்சல பிரதேசத்தின் மண்டி மாவட்டம், சர்காகாட் என்ற இடத்தில் இருந்து துர்காபூர் நோக்கி மாநில அரசுப் பேருந்து ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. இதில் ஓட்டுநர், நடத்துநர் உட்பட மொத்தம் 29 பேர் இருந்தனர்.
இந்நிலையில் சர்காகாட் அருகில் இப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சுமார் 100 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 4 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 21 பேர் காயம் அடைந்தனர்.
இவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி சென்று பார்வையிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT