Published : 25 Jul 2025 06:53 AM
Last Updated : 25 Jul 2025 06:53 AM
சண்டிகர்: பஞ்சாபில் பாகிஸ்தான் எல்லையில் இருந்து வந்த 6 டிரோன்களை பிஎஸ்எப் வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். இதுகுறித்து எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டம் மோதே கிராமத்துக்கு அருகில் இந்திய – பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் பிஎஸ்எப் வீரர்கள் புதன்கிழமை இரவு கண்காணிப்பு பணி மேற்கொண்டிருந்தனர்.
அப்போது பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவிய 5 டிரோன்களை சுட்டு வீழ்த்தினர். இதில் 3 துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் 1 கிலோ ஹெராயின் போதைப்பொருளை கைப்பற்றினர். இதுபோல் அட்டாரி கிராமத்துக்கு அருகில் வியாழக்கிழமை அதிகாலை பாகிஸ்தான் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதில் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT