Published : 23 Jul 2025 07:45 AM
Last Updated : 23 Jul 2025 07:45 AM

இந்திய ராணுவத்திடம் 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை ஒப்படைத்தது போயிங்

இந்திய விமானப் படையின் திறனை அதிகரிப்பதற்காக முதல் தொகுதியாக போயிங் நிறுவனத்தின் மூன்று அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் நேற்று இந்தியா வந்தடைந்தது. | படம்: பிடிஐ |

புதுடெல்லி: அமெரிக்​காவைச் சேர்ந்த போ​யிங் நிறு​வனம் மூன்று ஏஎச்​-64இ அப்​பாச்சி ஹெலி​காப்​டர்​களை இந்​திய ராணுவத்​திடம் நேற்று ஒப்​படைத்​தது. இந்​திய விமானப் படைத் திறனை நவீன​மாக்​கும் முயற்​சி​யின் ஒரு முக்​கிய மைல்​கல்​லாக இந்த அப்​பாச்சி ஹெலி​காப்​டர்​களின் வரவு பார்க்​கப்​படு​கிறது.

அமெரிக்​காவைச் சேர்ந்த போ​யிங் நிறு​வனத்​திட​மிருந்து இந்​திய ராணுவத்​துக்கு 6 அப்​பாச்சி ஹெலி​காப்​டர்​களை வாங்​கும் திட்டத்துக்கு கடந்த 2017-ம் ஆண்டு பாது​காப்பு அமைச்​சகம் அனு​மதி அளித்​தது. இதற்​காக, இந்​திய அரசு மற்​றும் போ​யிங் நிறு​வனத்​துக்கு இடையே ரூ.4,618 கோடிக்​கான ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.

இந்த அப்​பாச்சி ஏஎச்​-64இ ரக ஹெலி​காப்​டர் உலகின் அதிநவீன பன்​முக போர்த்​திறன் கொண்​ட​தாக விளங்​கு​கிறது. அமெரிக்க ராணுவம் உள்​ளிட்ட பல நாடு​களின் ராணுவத்​தில் இந்த ரக ஹெலி​காப்​டர்​கள் ஏற்​கெனவே சேவை​யில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளது. நவீன ஆயுத அமைப்​பு, இரவுநேர செயல்​பாட்டு திறன், சிக்​கலான போர் நடவடிக்​கைகள் மற்​றும் அனைத்து காலநிலைகளி​லும் சிறப்​பாக இயங்​கக் கூடிய வகை​யில் இந்த ஹெலி​காப்​டர்​கள் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளன.

மொத்​தம் ஆறு அப்​பாச்சி ஹெலி​காப்​டர்​களுக்கு ஆர்​டர் கொடுக்​கப்​பட்ட நிலை​யில், முதல் கட்​ட​மாக மூன்று ஹெலி​காப்​டர்​களை இந்​தி​யா​விடம் போ​யிங் ஒப்​படைத்​துள்​ளது. மீத​முள்ள மூன்று ஹெலி​காப்​டர்​கள் விரை​வில் வழங்​கப்​படும் என்று எதிர்​பார்க்கப்படுகிறது.

இந்த ஹெலி​காப்​டர்​களை இந்​தி​யா-​பாகிஸ்​தான் எல்​லைகளில் பயன்​படுத்த திட்​ட​மிட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது. இந்த அதிநவீன அப்​பாச்சி ஹெலி​காப்​டர்​கள் ராணுவத்​தின் செயல்​பாட்​டுத் திறன்​களை கணிச​மாக வலுப்​படுத்​தும் என்று இந்​திய ராணுவம் வெளியிட்ட சமூக வலை​தள பதி​வில்​ தெரிவித்​து உள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x