Published : 23 Jul 2025 07:39 AM
Last Updated : 23 Jul 2025 07:39 AM

நாடாளுமன்ற இரு அவையிலும் எதிர்க்கட்சியினர் 2-ம் நாளாக அமளி

விரைவில் தேர்தலை சந்திக்க உள்ள பிஹார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட இண்டியா கூட்டணிக் கட்சியினர். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சி எம்.பி. அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் எம்பி பிரியாங்கா காந்தி உள்ளிட்டோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். | படம்: பிடிஐ |

புதுடெல்லி: நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடர் நேற்று முன்​தினம் தொடங்​கியது. முதல் நாளில் பல்வேறு பிரச்​சினை​களை எழுப்பி மக்​களவை, மாநிலங்​களவை​யில் எதிர்க்​கட்​சிகள் அமளி​யில் ஈடு​பட்​டன. இதனால் இரு அவைகளும் முடங்​கின.

இதைத் தொடர்ந்து நேற்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியது. அப்​போது பஹல்​காம், ஆபரேஷன் சிந்​தூர், விமான விபத்து தொடர்​பான விவ​காரங்​களை மக்​களவை​யில் எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் எழுப்​பினர். அதோடு பிஹார் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணிக்கு எதிர்ப்பு தெரி​வித்து கோஷமிட்​டனர்.

இதனால் பகல் 12 மணி வரை அவை ஒத்​திவைக்​கப்​பட்​டது. அப்​போது எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் நாடாளு​மன்ற வளாகத்​தில் ஒன்றுகூடி ஆர்ப்​பாட்​டம் நடத்​தினர். மீண்​டும் மக்​களவை கூடிய​போது எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் தொடர்ந்து கோஷமிட்​டனர். இதன் காரண​மாக நாள் முழு​வதும் மக்​களவை ஒத்​திவைக்​கப்​பட்​டது.

மாநிலங்​களவை​யிலும் அதே பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் தொடர் அமளி​யில் ஈடு​பட்​டனர். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்ட அவை, பின்னர் நாள் முழு​வதும் ஒத்​திவைக்​கப்​பட்​டது. எதிர்க்​கட்​சிகளின் அமளி​யால் இரண்டாவது நாளாக நா​டாளு​மன்​றத்​தின்​ இரு அவை​களும்​ முடங்​கின.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x