Published : 23 Jul 2025 07:31 AM
Last Updated : 23 Jul 2025 07:31 AM

பக்தர்களின் வசதிக்காக திருமலையில் 3-வது க்யூ காம்ப்ளக்ஸ்: அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானம்

திருமலை: திரு​மலை​யில் உள்ள அன்​னமைய்யா பவனில் திருப்​பதி தேவஸ்​தான அறங்​காவலர் குழு கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இதில் பல்​வேறு தீர்​மானங்​கள் ஒரு​மன​தாக நிறைவேற்​றப்​பட்​டன.

இதுகுறித்து அறங்​காவலர் குழு தலை​வர் பி.ஆர்​.​நா​யுடு, தேவஸ்​தான நிர்​வாக அதிகாரி சியாமள ராவ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறிய​தாவது: திரு​மலைக்கு வரும் பக்​தர்​கள் எண்​ணிக்கை நாளுக்கு நாள் அதி​கரித்து வரு​கிறது. எனவே திருமலை​யில் 3-வது க்யூ காம்ப்​ளக்ஸ் கட்ட முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

இதற்​கான சாத்​தி​யக் கூறுகளை ஆராய தனி கமிட்டி அமைக்​கப்​படும். மேலும் பக்​தர்​களின் வசதிக்​காக திரு​மலை​யில் ஓய்வு அறை​கள் கட்ட தீர்​மானிக்​கப்​பட்​டுள்​ளது.

இதற்​கான இடங்​கள் விரை​வில் தேர்வு செய்​யப்​படும். அலிபிரி மற்​றும் ​வாரி மெட்டு பாதைகளில் பக்​தர்​களுக்கு விளக்​கு​கள், கழிப்பறை​கள், பாது​காப்பு என கூடு​தல் வசதி​கள் செய்து தரப்​படும். திரு​மலை​யில் சிலா தோரணம், சக்கர தீர்த்​தம் ஆகிய சுற்றுலா பகு​தி​கள் மேம்​படுத்​தப்​படும். முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு ஆலோ​சனைப்​படி, உலகம் முழு​வதும் ஏழு​மலை​யான் கோயில்கட்ட நிபுணர் குழு அமைக்​கப்​படும்.

திரு​மலை​யில் சைபர் குற்​றங்​களை தடுக்க சைபர் செக்​யூரிட்டி லேப் அமைக்​கப்​படும். திரு​மலை​யில் அனைத்து தேவஸ்தான துறைகளும் ஒரே இடத்​தில் இருக்​கும் வகை​யில் திரு​மலை திருப்​பதி நிர்​வாக அலு​வல​கம் கட்​டப்​படும். வேதம் படித்த வேத​ பண்டிதர்​களுக்கு வேலை கிடைக்​கும் வரை ஊக்​கத்​தொகை வழங்க ஆந்​திர அரசு முன்​வந்​துள்​ளது. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x