Last Updated : 23 Jul, 2025 07:01 AM

 

Published : 23 Jul 2025 07:01 AM
Last Updated : 23 Jul 2025 07:01 AM

பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் ரூ.14 கோடி கோகைன் பறிமுதல்: 2 இளம்பெண்கள் கைது

பெங்களூரு: பெங்​களூரு சர்​வ​தேச‌ விமான நிலை​யத்​தில் நேற்று முன்​தினம் அதி​காலை​யில் போதைப் பொருள் கடத்​தல் நடை​பெறு​வ​தாக வரு​வாய் புல​னாய்வு இயக்​குநரக அதி​காரி​களுக்கு ரகசிய தகவல் கிடைத்​தது. அதன் அடிப்​படை​யில் பெங்​களூரு மண்டல அதி​காரி​கள் விமான நிலை​யத்​தில் சோதனை​யில் ஈடு​பட்​டனர்.

அப்​போது குவாஹாட்​டி​யில் இருந்து பெங்​களூரு விமானத்​தில் வந்த 2 இளம்​பெண்​கள் மீது சந்​தேகம் ஏற்​பட்​டது. அவர்​களின் உடைமை​களை அதி​காரி​கள் பரிசோ​தித்​தனர். அவர்​களின் பெட்​டி​யில் வழக்​கத்​துக்கு மாறாக, 40-க்​கும் மேற்​பட்ட சோப்​பு​கள் இருந்தன.

அவற்​றின் உறையை பிரித்து சோதித்​த​போது, அதில் வெள்ளை நிற பொடி கண்​டு​ பிடிக்​கப்​பட்​டது. அதனை அதி​காரி​கள் சோதித்​த​போது கோகைன் போதைப் பொருள் என்​பது உறுதி செய்​யப்​பட்​டது. ஒட்​டுமொத்​த​மாக 7.5 கிலோ கோகைன் போதை பொருள் சிக்கியது.

அதனை உடனடி​யாக அதி​காரி​கள் பறி​முதல் செய்​தனர். இதன் சர்​வ​தேச சந்தை மதிப்பு சுமார் ரூ.14.69 கோடி என அதிகாரி​கள் தெரி​வித்​தனர். கைது செய்​யப்​பட்​ட​தில் 24 வயதான பெண் மணிப்​பூரை சேர்ந்​தவர் எனவும், 26 வயதான பெண் மிசோரமை சேர்ந்​தவர் எனவும் தெரிய​வந்​துள்​ளது.

இரு​வர் மீதும் வரு​வாய் புல​னாய்வு இயக்​குநரக அதி​காரி​கள் போதைப் பொருள் தடுப்பு சட்​டத்​தின் கீழ் வழக்கு பதிவு செய்​து வழக்க​மான மருத்​துவ பரிசோதனைக்கு பின்​னர், நேற்று பிற்​பகல் பெங்​களூரு மாநகர அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்​படுத்​தினர். அவர்களை 5 நாட்​கள் காவலில் எடுத்​து வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x