Published : 23 Jul 2025 06:48 AM
Last Updated : 23 Jul 2025 06:48 AM

வேலை வாங்கி தருவதாக கூறி கடத்த முயன்ற 56 இளம்பெண்கள் மீட்பு; 2 பேர் கைது

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்​பைகுரியில் இருந்து பிஹார் மாநிலம் பாட்னாவுக்கு திங்​கள்​கிழமை இரவு புறப்​பட்ட விரைவு ரயிலில் ரயில்வே பாது​காப்​புப் படை​யினர் (ஆர்​பிஎப்) சோதனை​யில் ஈடு​பட்​டனர்.

ஒரு பெட்​டி​யில் இளம் பெண்​கள் அதிக அளவில் இருந்​த​தால் சந்​தேகமடைந்த அவர்​கள், பெண்​களு​டன் பயணித்த ஒரு ஆண் மற்றும் பெண்​ணிடம் அதுபற்றி விசா​ரித்​துள்​ளனர். அவர்​கள் முன்​னுக்​குப் பின் முரணாக பதில் அளித்​துள்​ளனர்.

இதுகுறித்து ரயில்வே அதி​காரி​கள் கூறிய​தாவது: ரயி​லில் பயணம் செய்​தவர்​கள் மேற்கு வங்​கத்​தின் ஜல்​பைகுரி, கூச் பெஹர் மற்றும் அலிபுர்​து​வார் மாவட்​டங்​களைச் சேர்ந்​தவர்​கள் என விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. பெங்​களூரு​வைச் சேர்ந்த நிறுவனத்​தில் வேலை வாங்​கித் தரு​வ​தாக அவர்​களிடம் வாக்​குறுதி அளித்​துள்​ளனர்.

ஆனால், அவர்​களை பெங்​களூரு​வுக்கு அழைத்​துச் செல்​லாமல் பாட்னா செல்​லும் ரயி​லில் அழைத்​துச் செல்ல முயன்​றனர். வேலையில் அமர்த்​து​வதற்​கான எந்த ஆவண​மும் அவர்​களிடம் இல்​லை. இதனால் அந்த 56 பெண்​களை​யும் மீட்டுள்​ளோம். இவர்களை அழைத்​துச் செல்ல முயன்ற 2 பேரை கைது செய்​து விசாரிக்​கிறோம்​. இவ்​வாறு அவர்​கள்​ தெரி​வித்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x