Published : 21 Jul 2025 07:51 AM
Last Updated : 21 Jul 2025 07:51 AM

ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான ஊக செய்திகளை ஊடகங்கள் தவிர்க்க மத்திய அமைச்சர் வேண்டுகோள்

மத்​திய சிவில் விமானப் போக்​கு​வரத்து அமைச்​சர் ராம் மோகன் நாயுடு கிஞ்​சா​ரபு

புதுடெல்லி: ஏர் இந்​தியா விமான விபத்து தொடர்​பான ஊக செய்​தி​கள் வெளி​யிடு​வதை மேற்​கத்​திய ஊடகங்​கள் தவிர்க்க வேண்டும் என்று மத்​திய சிவில் விமானப் போக்​கு​வரத்து அமைச்​சர் ராம் மோகன் நாயுடு கிஞ்​சா​ரபு நேற்று வேண்​டு​கோள் விடுத்துள்​ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறிய​தாவது: ஏர் இந்​தியா விமான விபத்து குறித்த இறுதி அறிக்​கைக்​காக அரசு காத்​திருக்​கிறது. அதுவரை மேற்​கத்​திய ஊடகங்​கள் ஊகங்​களை பயன்​படுத்தி செய்​தி​கள் வெளி​யிடு​வதை தவிர்க்க வேண்​டும். இந்​தி​யா​வில் கருப்புப் பெட்​டித் தரவை வெற்​றிகர​மாக டிகோட் செய்த விமான விபத்து புல​னாய்வு பணி​யகத்தை (ஏஏஐபி) பாராட்ட வேண்​டும்.

இந்​தி​யா​விலேயே தரவு​களை மீட்​டெடுக்​கும் அற்​புத​மான பணியை அவர்​கள் செய்​துள்​ளனர். முன்​ன​தாக, தரவு​களை மீட்​டெடுக்க கருப்பு பெட்​டியை வெளி​நாடு​களுக்கு அனுப்ப வேண்​டி​யிருந்​தது. முதல்​கட்ட அறிக்​கை​யும் நமக்கு கிடைத்​துள்​ளது.

முழு​மை​யான அறிக்கை கிடைக்​கும் வரை நாம் பொறுமை​யாக​ இருக்க வேண்​டும். இறுதி அறிக்கை வரும் வரை எந்த கருத்தையும் அரைகுறை​யாக புரிந்​து​கொண்டு கருத்து தெரி​விப்​பது நல்​லதல்ல. பாது​காப்பு அம்​சங்​களின் அடிப்​படை​யில் தேவையான அனைத்து உதவி​களை​யும் வழங்க தயா​ராக உள்​ளோம். இவ்​வாறு ராம்​ மோகன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x