Published : 18 Jul 2025 08:10 AM
Last Updated : 18 Jul 2025 08:10 AM

தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிஹாரில் வீடுகளுக்கு 125 யூனிட் இலவச மின்சாரம்: ஜூலை மாதம் முதல் அமல் 

பாட்னா: பிஹாரில் வீடு​களுக்கு 125 யூனிட் இலவச மின்​சா​ரம் வழங்​கப்​படும் என்​றும் ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் முதல்​வர் நிதிஷ் குமார் அறி​வித்​துள்​ளார். பிஹார் சட்​டப்​பேர​வைக்கு அடுத்த சில மாதங்​களில் தேர்​தல் நடை​பெற உள்​ளது.

இந்​நிலை​யில் முதல்​வர் நிதிஷ் குமார் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: பிஹாரில் மின்​சார கட்​ட​ணம் ஏற்​கெனவே குறை​வாக உள்​ளது.

இந்​நிலை​யில், வீடு​களுக்கு மாதத்​துக்கு 125 யூனிட் இலவச மின்​சா​ரம் வழங்​கப்​படும். இது வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும். அதாவது ஜூலை மாதத்​துக்​கான பில்​லில் 125 யூனிட் வரை கட்​ட​ணம் வசூலிக்​கப்பட மாட்​டாது. இதன்​மூலம் 1.67 கோடி குடும்​பத்​தினர் பயனடை​வார்​கள்.

மாநிலத்​தில் சூரிய மின் உற்​பத்தி ஊக்​குவிக்​கப்​படும். குறிப்​பாக, அடுத்த 3 ஆண்​டு​களில் சூரிய சக்தி உட்பட மாற்று ஆதா​ரங்​கள் மூலம் 10 ஆயிரம் மெகா​வாட் மின்​சா​ரம் உற்​பத்தி செய்​யப்​படும்.

இவ்​வாறு அவர் தெரி​வித்​தார். ராஷ்ட்​ரிய ஜனதா தளம் ஆட்​சிக்கு வந்​தால் வீடு​களுக்கு மாதத்​துக்கு 200 யூனிட் மின்​சா​ரம் இலவசமாக வழங்​கப்​படும் என அக்​கட்​சி​யின் மூத்த தலை​வர் தேஜஸ்வி யாதவ் சமீபத்​தில் அறி​வித்​திருந்​தது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x