Published : 18 Jul 2025 07:18 AM
Last Updated : 18 Jul 2025 07:18 AM
புவனேஸ்வர்: ஒடிசாவின் பாலசோர் நகரில் உதவி பேராசிரியர் ஒருவரின் பாலியல் தொல்லை காரணமாக கல்லூரி மாணவி ஒருவர் தீக்குளித்து இறந்தார். மாணவிக்கு நீதி கேட்டு காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், ஆர்ஜேடி உள்ளிட்ட 8 கட்சிகள் சார்பில் நேற்று காலை 6 முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேர முழு அடைப்பு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனால் புவேனஸ்வர், கட்டாக் மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் சாலைகள் வெறிச்சோடின. ரயில் மறியல் காரணமாக சில இடங்களில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
புவனேஸ்வரின் பல்வேறு முக்கிய சாலைகளில் போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டனர். மாநில பாஜக அரசுக்கு எதிராக அவர்கள் முழுக்கம் எழுப்பினர். இறந்த கல்லூரி மாணவிக்கு நீதி கோரினர். மாநிலத்தில் பெரும்பாலும் போக்குவரத்து மற்றும் வர்த்தக துறைகளை இப்போராட்டம் பாதித்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT