Published : 18 Jul 2025 07:18 AM
Last Updated : 18 Jul 2025 07:18 AM

கல்​லூரி மாணவி தற்​கொலையை கண்டித்து ஒடிசாவில் 12 மணி நேர முழு அடைப்பு

கோப்புப் படம்

புவனேஸ்வர்: ஒடி​சா​வின் பாலசோர் நகரில் உதவி பேராசிரியர் ஒரு​வரின் பாலியல் தொல்லை காரண​மாக கல்​லூரி மாணவி ஒருவர் தீக்​குளித்து இறந்​தார். மாணவிக்கு நீதி கேட்டு காங்​கிரஸ், இடது​சாரி கட்​சிகள், ஆர்​ஜேடி உள்​ளிட்ட 8 கட்​சிகள் சார்​பில் நேற்று காலை 6 முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேர முழு அடைப்பு அடைப்பு போராட்​டத்​துக்கு அழைப்பு விடுக்​கப்​பட்​டது.

இதனால் புவேனஸ்​வர், கட்​டாக் மற்​றும் மாநிலத்​தின் பிற பகு​தி​களில் சாலைகள் வெறிச்​சோடின. ரயில் மறியல் காரண​மாக சில இடங்​களில் ரயில் சேவை பாதிக்​கப்​பட்​டது.

புவனேஸ்​வரின் பல்​வேறு முக்​கிய சாலைகளில் போராட்​டக்​காரர்​கள் மறியலில் ஈடு​பட்​டனர். மாநில பாஜக அரசுக்கு எதி​ராக அவர்​கள் முழுக்​கம் எழுப்​பினர். இறந்த கல்​லூரி மாணவிக்கு நீதி கோரினர். மாநிலத்​தில் பெரும்​பாலும் போக்​கு​வரத்து மற்​றும் வர்த்தக துறை​களை இப்​போ​ராட்​டம் பாதித்​தது. இதனால் மக்​களின்​ இயல்​பு வாழ்க்​கை பா​திக்​கப்​பட்​டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x