Published : 18 Jul 2025 06:57 AM
Last Updated : 18 Jul 2025 06:57 AM
புதுடெல்லி: ஸ்வச் சர்வேக் ஷன் திட்டத்தின் கீழ் கடந்த 2016-ம் ஆண்டு முதல் இந்தியாவின் தூய்மையான நகரங்கள் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இதன்படி 2024-25-ம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இதில் நாட்டின் தூய்மையான நகரங்களில், ம.பி.யின் இந்தூர் 8-வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. இதையடுத்து குஜராத்தின் சூரத் இரண்டாவது இடத்தையும் மகாராஷ்டிராவின் நவி மும்பை மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
இதையடுத்து 3-10 லட்சம் மக்கள் தொகை பிரிவில் உ.பி.யின் நொய்டா முதலிடம் பிடித்துள்ளது. சண்டிகர் யூனியன் பிரதேசம் 2-வது இடத்தையும் கர்நாடாகவின் மைசூரு 3-வது இடத்தையும் பிடித்துள்ளன.
டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் இதற்கான விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 78 விருதுகளை அவர் வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT