Published : 18 Jul 2025 06:11 AM
Last Updated : 18 Jul 2025 06:11 AM

அடுத்த வீரர் உள்நாட்டு விண்கலத்தில் பயணம் செய்வார்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

புதுடெல்லி: “இந்​தி​யா​வின் அடுத்த விண்​வெளி வீரர், உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட விண்​கலத்​தில் பயணம் செய்​வார்” என விண்​வெளித்​துறை அமைச்​சர் ஜிதேந்​திர சிங் கூறி​யுள்​ளார்.

அவர் பிடிஐ நிறு​வனத்​துக்கு அளித்த பிரத்​யேக பேட்​டி​யில் கூறிய​தாவது: இந்​திய விண்​வெளி வீரர் ஷுபான்ஷு சுக்​லா, ஆக்​ஸி​யாம்-4 திட்​டத்​தின் கீழ் சர்​வ​தேச விண்​வெளி மையத்​தில் 3 வார காலம் தங்கி ஆய்​வுப் பணி​களில் ஈடு​பட்டு பூமி திரும்​பி​யுள்​ளார். அமெரிக்க வீராங்​கனை பெக்கி விட்​சன் டிராகன் விண்​கலத்​தின் கமாண்​டர். ஷுபான்ஷு சுக்லா பைலட்​டாக சென்​றுள்​ளார். சர்​வ​தேச விண்​வெளி மையத்​தில் அவர் மேற்​கொண்ட ஆய்​வு​ முக்​கிய​மானது.

அவரது பயணத்​துக்​காக ஆக்​ஸி​யாம் ஸ்பேஸ் நிறு​வனத்​துக்கு இஸ்ரோ நிறு​வனம் ரூ.550 கோடி வழங்​கியது. அவர் விண்​வெளிக்கு வீரர்​களை அனுப்​பும் ககன்​யான் திட்​டத்தை நாம் மேற்​கொள்​வ​தால், சர்​வ​தேச விண்​வெளி மையத்தை கையாள்​வ​தில் அவர் பெற்ற அனுபவம் மிக முக்​கிய​மானது. இது இந்​தி​யா​வின் எதிர்​கால, விண்​வெளி பயணங்​களுக்கு மிக​வும் பயனுள்​ள​தாக இருக்​கும். விண்​வெளி ஆய்​வில் சர்​வ​தேச நாடு​களு​டன் இணைந்து செயல்​பட​வும் வழி​வகுக்​கும்.

ககன்​யான் விண்​கலத்​தில் 2 விண்​வெளி வீரர்​களை இஸ்ரோ 2027-ம் ஆண்டு அனுப்ப உள்​ளது. இவர்​கள் பூமி​யின் கீழடுக்கு சுற்​று​வட்ட பாதை​யில் பயணம் செய்​து​விட்டு பூமி திரும்​புவர். இதில் உள்​நாட்​டில் தயாரிக்​கப்​படும் விண்​கலம் பயன்​படுத்​தப்​படும். இந்​திய விண்​வெளி வீரர்​கள், முதல் முறை​யாக இந்​திய விண்​கலத்​தில் பயணம் செய்​ய​வுள்​ளனர். இதன் மூலம் விண்​வெளிக்​கு, வீரர்​களை அனுப்​பும் ஒரு சில நாடு​களின் பட்​டியலில் இந்​தி​யா​வும் இடம் பெறும். இத்​திட்​டம், எதிர்​காலத்​தில் சொந்த விண்​வெளி மையம் அமைக்​கும் முயற்​சிக்​கும் வழி​வகுக்​கும்.

நாம் நமது சொந்த விண்​வெளி மையத்தை உரு​வாக்க திட்​ட​மிட்​டுள்​ளோம். இது 2035-ம் ஆண்​டில் சாத்​தி​ய​மாக வாய்ப்​புள்​ளது. இதற்கு பாரத் விண்​வெளி மையம் (பிஎஸ்​எஸ்) என பெயர் வைக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. நில​வின் தென்​துருவ பகு​தி​யில் சந்​திர​யான்-3 விண்​கலத்தை இஸ்ரோ தரை​யிறக்​கியதன் மூலம், விண்​வெளி ஆய்​வில் முன்​னணி​யில் உள்ள நாடு​களின் வரிசை​யில் இந்​தியா இடம் பிடித்​தது. தற்​போது ஷுபான்ஷு சுக்லா சர்​வ​தேச விண்​வெளி மையம் சென்று ஆய்வு பணி​களை முடித்​து​விட்டு திரும்​பி​யுள்​ளார். இதன் மூலம் விண்​வெளித்​துறை​யில் எத்​தகைய சவால்​களை​யும் சந்​திக்க இந்​தியா தயார் நிலை​யில் உள்​ளது என்ற தகவல் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

விண்​வெளித்​துறையை தனி​யார் துறைக்கு திறந்​து​விட மத்​திய அரசு முடிவு செய்​தது, இந்​திய விண்​வெளி பொருளா​தா​ரத்​துக்கு ஊக்​கு​விப்பை அளித்​துள்​ளது. இந்​தி​யா​வின் விண்​வெளி பொருளா​தா​ரம் தற்​போதுள்ள 8.4 பில்​லியன் அமெரிக்க டாலர் என்ற நிலை​யில் இருந்து 2033-ம் ஆண்​டில் 44 பில்​லியன் அமெரிக்க டால​ராக உயரும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.இவ்​வாறு அவர் கூறி​னார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x