Published : 17 Jul 2025 08:14 AM
Last Updated : 17 Jul 2025 08:14 AM

வங்க மொழி பேசும் மக்களுக்கு துன்புறுத்தல்: முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் போராட்டம்

பாஜக ஆளும் மாநிலங்களில் வங்க மொழி பேசும் மக்கள் துன்புறுத்தப்படுவதை கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா தலைமையில் கொல்கத்தாவில் நேற்று மாபெரும் பேரணி நடைபெற்றது. இதில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் அபிஷேக் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.படம்:பிடிஐ

கொல்கத்தா: ​​பார​திய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்​களில் வங்க மொழி பேசும் மக்​கள் பெரும் துன்​புறுத்​தலுக்கு ஆளாக்கப்படுவதாக கூறி மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்ஜி தலை​மை​யில் நேற்று கொல்​கத்​தா​வில் போ​ராட்​டம் நடைபெற்றது.

திரிண​மூல் காங்​கிரஸ் தேசிய பொது செயலர் அபிஷேக் பானர்ஜி உள்​ளிட்ட முக்​கிய தலை​வர்​கள் மற்​றும் ஆயிரக்​கணக்​கான பொது​மக்​கள் இந்த போ​ராட்​டத்​தில் கலந்து கொண்​டனர். இந்த போ​ராட்​டத்​தையொட்டி 1,500 போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டனர். முக்​கிய சாலைகளில் வாக​னப் போக்​கு​வரத்து திருப்​பி​விடப்​பட்​டது.

மேற்கு வங்க மாநிலம் அடுத்த ஆண்டு சட்​டப்​பேரவை தேர்தலை எதிர்​கொள்ள உள்​ளது. இந்த நிலை​யில், பிரதமர் மோடி வருகை தரு​வதற்கு ஒரு​நாள் முன்​ன​தாக நேற்று இந்​தப் போ​ராட்​டம் நடை​பெற்​றது. ஆனால் மம்தா பானர்​ஜி​யின் இந்த போ​ராட்​டத்​துக்கு எதிர்​க்கட்சி தலை​வர் சுவேந்து அதி​காரி கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளார்.

வங்​கமொழி பேசும் ரோஹிங்​கி​யாக்​கள் மற்​றும் சட்​ட​விரோத வங்​கதேச ஊடுரு​வல்​காரர்​களை திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி காப்பாற்​று​வதற்​காக இந்த போ​ராட்​டத்​தை முன்​னெடுத்​துள்​ள​தாக சுவேந்​து அதி​காரி குற்​றம்​ ​சாட்​டி​யுள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x