Published : 17 Jul 2025 07:05 AM
Last Updated : 17 Jul 2025 07:05 AM

இமாச்சலில் சாலையின் நடுவில் அச்சுறுத்தும் மின் கம்பங்கள்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

பிஹாரில் மரங்களை அகற்றாமல் போடப்பட்ட சாலை. அடுத்தபடம்: இமாச்சலில் சாலை நடுவில் உள்ள மின்கம்பங்கள்.

சிம்லா: இமாச்சல பிரதேசத்​தின் சிர்​மவுர் மாவட்​டத்​தில் பத்​ரிபூர், கிஷன்​பு​ரா, சந்​தோக்​கர், புரு​வாலா ஆகிய சிறு நகரங்​களை இணைக்​கும் சாலை உள்​ளது. இந்த சாலை​யின் நடு​வில் மின் கம்​பங்​கள் இருக்​கும் ஒரு வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலானது. அந்த வீடியோவை பதி​விட்ட நபர், “இப்​படி ஒரு சாலையை உரு​வாக்​கியதற்​காக என் நாட்​டைப் பற்றி நான் பெரு​மைப்​படு​கிறேன், இதை பார்ப்​ப​தற்​காகவே நான் ஹரி​யா​னா​வில் இருந்து வந்​துள்​ளேன். இது இமாச்​சலின் சுற்​றுலாவை அதி​கரிக்க உதவுகிறது.

பொருளா​தா​ரம் இப்​படித்​தான் வளர்​கிறது’’ என்று கிண்​டல் செய்​துள்​ளார். இதுகுறித்து மாநில மின் துறை முன்​னாள் அமைச்​சரும் பாஜக எம்​எல்​ஏவு​மான சுக்​ராம் சவுத்ரி கூறுகை​யில், “இந்த மின் கம்​பங்​கள் 25 ஆண்​டு​கள் பழமை​யானவை. இவை சாலைக்கு வெளி​யில் தான் இருந்​தன. ஆனால் சாலையை விரி​வாக்க திட்​ட​மிட்​ட​போது, மின் கம்​பங்​களை அகற்​று​வது குறித்து யாரும் பரிசீலிக்​க​வில்​லை. இவற்றை இடம்​மாற்ற நான் கோரிக்கை விடுத்​துள்​ளேன். எனினும் இதை செயல்​படுத்த நிதி இல்லை என்று அதி​காரி​கள் கூறுகின்​றனர்’’ என்​றார்.

இதற்கு முன் பிஹாரில் ஒரு சாலையின் நடுவில் மரங்கள் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது பிஹாரின் ஜெகனாபாத் மாவட்ட நிர்​வாகம் ரூ.100 கோடி​யில் சாலையை விரி​வாக்​கம் செய்​த​போது, மரங்​களை அகற்ற வனத்​துறை​யிடம் அனுமதி கேட்​டது. ஆனால் இந்த கோரிக்கையை வனத்துறை ஏற்காததால் மாவட்ட நிர்வாகம் மரங்களை சுற்றி சாலையை உருவாக்கி விட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x