Published : 17 Jul 2025 07:01 AM
Last Updated : 17 Jul 2025 07:01 AM

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து: பிரதமர் நரேந்திர மோடிக்கு கார்கே, ராகுல் கடிதம்

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்​தஸ்து வழங்​கும் மசோ​தாவை வரும் நாடாளு​மன்ற கூட்​டத்​தொடரில் கொண்​டுவர வேண்​டும் என்று காங்​கிரஸ் தலை​வர்​கள் மல்​லி​கார்ஜுன கார்கே மற்​றும் ராகுல் வலி​யுறுத்தி உள்​ளனர். கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது.

அதன் பின்னர், ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. காஷ்மீரில் அமைதி திரும்பிய பின் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்தது.

இதுகுறித்து பிரதமர் மோடிக்கு இவர்​கள் கூட்​டாக எழு​திய கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: காஷ்மீர் மக்​கள் கடந்த 5 ஆண்​டு​களாக மீண்​டும் முழு மாநில அந்​தஸ்து கோரிக்​கையை முன்​வைத்து வரு​கின்​றனர். இந்​தக் கோரிக்கை சட்​டப்​பூர்​வ​மானது மற்​றும் ஜனநாயக உரிமை​கள் தொடர்​பானது.

கடந்த காலங்​களில் யூனியன் பிரதேசங்​களுக்கு மாநில அந்​தஸ்து வழங்​கப்​பட்​டுள்​ளது. ஆனால் ஜம்​மு-​காஷ்மீர் விவ​காரம் சுதந்திர இந்​தி​யா​வில் இதற்கு முன் நடந்​தி​ராத ஒன்​று. முழு​மை​யான மாநிலம் அதன் பிரி​வினைக்கு பிறகு யூனியன் பிரதேச​மாக மாற்​றப்​பட்​டது இதுவே முதல்​முறை.

ஜம்மு காஷ்மீருக்கு மீண்​டும் மாநில அந்​தஸ்து வழங்​கப்​படும் என்று நீங்​கள் பலமுறை உறுதி அளித்​துள்​ளீர்​கள். உச்ச நீதி​மன்​றத்​தி​லும் இதே வாக்​குறு​தியை மத்​திய அரசு அளித்​துள்​ளது. எனவே நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத்​தொடரில் இது தொடர்​பான மசோ​தாவை மத்​திய அரசு கொண்டு வர வேண்​டும்.

கூடு​தலாக, லடாக் யூனியன் பிரதேசத்தை அரசி​யலமைப்​பின் 6-வது அட்​ட​வணை​யில் சேர்க்​கும் மசோதா கொண்டு வரப்பட வேண்​டும். லடாக் மக்​களின் கலாச்​சா​ரம், வளர்ச்சி மற்​றும் அரசி​யல் எதிர்​பார்ப்​பு​களை நிறைவேற்​ற​வும் அவர்​களின் உரிமை​கள், நிலம் மற்​றும் அடை​யாளத்தை பாது​காக்​க​வும் இது முக்​கிய நடவடிக்​கை​யாக இருக்​கும். இவ்​வாறு அவர்​கள் தங்​கள்​ கடிதத்​தில்​ கூறி​யுள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x