Published : 17 Jul 2025 06:38 AM
Last Updated : 17 Jul 2025 06:38 AM

நிமிஷா செய்த குற்றத்துக்கு மன்னிப்பு கிடையாது: உயிரிழந்த தலால் மெஹ்தியின் சகோதரர் திட்டவட்டம்

நிமிஷா

புதுடெல்லி: தன் சகோதரரை கொலை செய்த கேரள செவிலியர் நிமிஷா​வின் குற்​றத்​துக்கு மன்​னிப்பு வழங்க முடி​யாது என அப்​தெல்ஃபத்தா மெஹ்தி திட்​ட​வட்​ட​மாகத் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகை​யில், “இந்​திய ஊடகங்​கள் குற்​ற​வாளி நிமிஷாவை பாதிக்​கப்​பட்​ட​வ​ராக சித்​தரிக்​கும் பணி​யில் ஈடு​வரு​கின்​றன. இது எங்​களது குடும்​பத்​தினரிடம் ஆழ்ந்த அதிருப்​தியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

எனது சகோதரர் தலால் அப்​தோ மெஹ்​தியை கொலை செய்த குற்​றத்​துக்​காகவே நிமிஷா பிரி​யா​வுக்கு இந்த தண்​டனை வழங்​கப்​பட்​டுள்​ளது. எனவே அவருக்கு மரண தண்​டனையை நிச்​ச​யம் நிறைவேற்ற வேண்​டும். இந்த குற்​றத்​துக்கு அவருக்கு மன்​னிப்பு வழங்க முடி​யாது‘‘ என்​றார்.

கடந்த 2017-ம் ஆண்டு தலால் அப்​தோ மெஹ்​தியை கொலை செய்த குற்​றத்​துக்​காக கேரள செவிலியர் நிமிஷா பிரி​யா​வுக்கு மரண தண்​டனை விதிக்​கப்​பட்டு நேற்று அது நிறைவேற்​றப்பட இருந்​தது. இந்த நிலை​யில், நீண்​ட​கால​மாக நடை​பெற்ற பலமுனை பேச்​சு​வார்த்​தைக்கு பிறகு நிமிஷா​வின் மரண தண்​டனை அடுத்த உத்​தரவு வரும் வரை தற்​காலிக​மாக நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்​ளது.

கேரளா​வின் இஸ்​லாமிய மதத் தலை​வர் அபூபக்​கர் முஸ்​லி​யாரின் மத்​தி​யஸ்​தம் மற்​றும் இந்​திய அரசின் தீவிர முயற்​சி​யின் பலனாக இந்த தண்​டனை நிறுத்​தம் சாத்​தி​ய​மாகி​யுள்​ளது. இருப்​பினும், கொலை​யான மெஹ்​தி​யின் குடும்​பத்​துக்கு குரு​திப் பணம் கொடுத்து நிமிஷாவை மீட்​ப​தில் இன்​னும் சிக்​கல் நீடித்​து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x