Published : 16 Jul 2025 08:03 AM
Last Updated : 16 Jul 2025 08:03 AM
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த பாதுகாப்பு படையினர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். விஷ்ணுபூர் மாவட்டத்தில் கடந்த வாரம் மைத்தேயி பிரிவினரின் அரம்பாய் தெங்கால் என்ற அமைப்பைச் சேர்ந்த 6 பேர் உட்பட 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் மக்கள் வைத்திருக்கும் சட்டவிரோத ஆயுதங்களை பறிமுதல் செய்ய இம்ப்பால் கிழக்கு, இம்ப்பால் மேற்கு, தவுபால், காக்சிங், விஷ்ணுபூர் மாவட்டத்தில் மத்திய போலீஸாருடன் இணைந்து மாநில போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கையெறி குண்டுகள், வெடிகுண்டுகள், ஏ.கே. ரக துப்பாக்கிகள் உட்பட 86 ஆயுதங்கள் 974 வெடிமருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT