Published : 16 Jul 2025 07:21 AM
Last Updated : 16 Jul 2025 07:21 AM

ஆபத்தான உணவு பட்டியலில் சமோசா, ஜிலேபி? - எச்சரிக்கை விடவில்லை என மத்திய அரசு மறுப்பு

படம்: மெட்டா ஏஐ

புதுடெல்லி: இந்​தி​யா​வில் உடல் பரு​மன் கொண்​ட​வர்​களின் எண்​ணிக்கை அதி​கரித்து வரு​கிறது. 2050-ம் ஆண்​டுக்​குள் 44.9 கோடிக்​கும் அதி​க​மான இந்​தி​யர்​கள் அதிக எடை அல்​லது உடல் பரு​ம​னாக இருப்​பார்​கள் என்​றும் கணிக்​கப்​பட்​டுள்​ளது. ஏற்​க​னவே, நகர்ப்​புறங்​களில் வசிப்​பவர்​களில் 5-ல் ஒரு​வர் உடல் பரு​ம​னாக இருப்​ப​தாக ஆய்​வில் கண்​டறியப்​பட்டு உள்​ளது.

உடலுக்கு தீங்கு விளைவிக்​கும் மோச​மான உணவு வகைகள், உடல் செயல்​பாடு இல்​லாமை ஆகிய​வற்​றால் குழந்​தைகளுக்​கும் உடல் பரு​மன் அதி​கரித்து வரு​கிறது.

இந்​நிலை​யில் நாக்​பூர் எய்ம்ஸ் உட்பட அனைத்து மத்​திய அரசு மருத்​து​வ​மனை​களி​லும், உணவுப்​பொருட்​களில் இருக்​கும் எண்ணெய் மற்​றும் சர்க்​கரை அளவு​களை பட்​டியலிட்டு எச்​சரிக்கை பலகைகள் வைக்க மத்​திய சுகா​தார அமைச்​சகம் உத்​தர​விட்​டுள்​ள​தாக செய்​தி​கள் வெளி​யா​யின. ஆனால் இதற்கு மத்​திய சுகா​தா​ரத்​துறை அமைச்​சகம் மறுப்பு தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக மத்​திய செய்​தித்​துறை அமைச்​சகத்​தின் பத்​திரிகை தகவல் அமைப்​பு(பிஐபி) தனது எக்ஸ் தளத்​தில் நேற்று கூறியுள்​ள​தாவது: சமோ​சா, ஜிலேபி, லட்டு போன்ற உணவு​களுக்கு எச்​சரிக்கை வாசகங்​கள் வைக்​கு​மாறு மத்​திய அரசு நடத்​தும் கேண்​டீன்​களுக்கு எந்​த​வித உத்​தர​வை​யும் சுகா​தா​ரத்​துறை அமைச்​சகம் பிறப்​பிக்​க​வில்​லை.

சுகா​தா​ரத்​துறை அமைச்​சகம் இது​போன்ற உத்​தர​வைப் பிறப்​பித்​துள்​ள​தாக சில பத்​திரி​கை​களில் செய்​தி​கள் வெளி​யாகி​யுள்​ளன. ஆனால் அந்​தச் செய்​தி​களில் உண்மை இல்​லை. இவ்​வாறு பிஐபி தெரி​வித்​துள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x