Published : 16 Jul 2025 07:12 AM
Last Updated : 16 Jul 2025 07:12 AM

ஒலியைவிட 8 மடங்கு வேகம் சென்று தாக்கும் புதிய ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி

புதுடெல்லி: ஒலியை​விட 8 மடங்கு வேகத்​தில் சென்று 1,500 கி.மீ தூர​முள்ள இலக்கை தாக்​கும் புதிய ஹைபர்சோனிக் ஏவு​கணையை இந்​தியா நேற்று வெற்​றிகர​மாக சோதனை செய்​தது. முப்​படைகளுக்கு தேவை​யான ஆயுதங்​களை ராணுவ ஆராய்ச்சி மேம்​பாட்டு மையம் (டிஆர்​டிஓ) தயாரித்து சோதனை செய்து வரு​கிறது. பல கட்ட வெற்​றிகர பரிசோதனைக்​குப்​பின் இந்த ஆயுதங்​கள் படை​யில் சேர்க்​கப்​படும்.

இந்​நிலை​யில் இடி-எல்​டிஎச்​சிஎம் (Extended Trajectory Long Duration Hypersonic Cruise Missile (ET-LDHCM) என்ற ஹைபர்​சோனிக் ஏவு​கணையை டிஆர்​டிஓ தயாரித்​தது. இது ஒலியை விட 8 மடங்கு வேகத்​தில் (மேக் 8) அதாவது மணிக்கு 11,000 கி.மீ வேகத்​தில் செல்​லும். இந்த ஏவு​கணையை இந்​தியா நேற்று வெற்​றிகர​மாக சோதனை செய்​தது.

தற்​போது இந்த வகை ஏவு​கணை ரஷ்​யா, அமெரிக்கா மற்​றும் சீனா​விடம் மட்​டுமே உள்​ளன. ஹைபர்​சோனிக் ஏவு​கணையை இந்​தியா வெற்​றிகர​மாக பரிசோ​தித்​துள்​ள​தால், அந்த நாடு​களின் வரிசை​யில் இந்​தி​யா​வும் இணைந்​துள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x