Published : 11 Jul 2025 07:24 AM
Last Updated : 11 Jul 2025 07:24 AM

மணிப்பூர் செல்வாரா பிரதமர்? - ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

புதுடெல்லி: கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்வாரா என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக சமூக வலை தளத்தில் அவர் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: அடிக்கடி வெளிநாடு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, தற்போது பல்வேறு வெளிநாட்டு பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பி உள்ளார். அவரை இந்தியா வரவேற்கிறது.

கலவரம், வன்முறையால் பாதிக்​கப்​பட்​டிருக்​கும் மணிப்​பூர் மாநிலம், கடந்த 2 ஆண்​டு​களாக பிரதமர் நரேந்​திர மோடி​யின் வரு​கையை எதிர்​பார்த்து காத்​திருக்​கிறது. வெளி​நாட்​டில் இருந்து இந்​தியா திரும்​பி​யிருக்​கும் அவர் இப்​போ​தாவது சிறிது நேரம் ஒதுக்கி மணிப்​பூர் செல்​வா​ரா? காஷ்மீரில் பஹல்​காமில் சுற்​றுலாப் பயணி​கள் மீது தாக்​குதல் நடத்​திய தீவிர​வா​தி​கள் இது​வரை நீதி​யின் முன்பு நிறுத்​தப்​பட​வில்​லை. இதுகுறித்து பிரதமர் ஆய்வு செய்​வா​ரா?

பிரதமர் மோடி​யின் குஜ​ராத் மாநிலம் இயற்கை சீற்​றத்​தால் சீர்​குலைந்​திருக்​கிறது. இமாச்சல பிரதேசம் பெரு​வெள்​ளத்​தால் மிக மோச​மாகப் பாதிக்​கப்​பட்டு இருக்​கிறது. இந்த மாநிலங்​களின் நிவாரணப் பணி​களில் பிரதமர் மோடி கவனம் செலுத்​து​வா​ரா?

நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடர் விரை​வில் தொடங்க உள்​ளது. இந்த முறை​யா​வது, கூட்​டத்​தொடருக்கு முன்பு நடை​பெறும் அனைத்து கட்சி கூட்​டத்​துக்கு பிரதமர் நரேந்​திர மோடி தலைமை ஏற்க வேண்​டும். இவ்​வாறு ஜெய்​ராம் ரமேஷ் தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x