Published : 04 Jul 2025 12:17 AM
Last Updated : 04 Jul 2025 12:17 AM

நாடாளுமன்றம் ஜூலை 21-ம் தேதி கூடுகிறது

புதுடெல்லி: நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடரை ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடத்த குடியரசுத் தலை​வர் திரவுபதி முர்மு ஒப்​புதல் அளித்​துள்​ளார். சுதந்​திர தினத்தை முன்​னிட்டு ஆகஸ்ட் 13, 14-ல் மட்​டும் நாடாளு​மன்​றத்​தில் பணி​கள் நடை​பெறாது என்று நாடாளு​மன்ற விவ​கார ​துறை அமைச்​சர் கிரிண் ரிஜிஜு தெரி​வித்​துள்​ளார்.

கூட்​டத்தொடரை ஆகஸ்ட் 12-ம் தேதி​யுடன் முடிக்க ஏற்கெனவே திட்டமிடப்பட்டது. தற்​போது ஆகஸ்ட் 21 வரை நடைபெறுவதாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. சுமார் ஒரு மாதம் நடை​பெறும் இந்த நீண்ட கூட்​டத்தொடரில் பல முக்​கிய மசோ​தாக்​களை அறி​முகம் செய்ய மத்திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்​கைக்​கு ​பிறகு, முதல்முறை​யாக நாடாளு​மன்​றம் கூடு​வ​தால், அந்த நடவடிக்கை குறித்​தும், இந்​தி​யா - பாகிஸ்​தான் போர்நிறுத்​தத்​தில் அமெரிக்க அதிபர் ட்ரம்​பின் தலை​யீடு குறித்தும் விவாதம் நடை​பெறும் என தெரி​கிறது. கூட்​டத்தொடர் தொடர்பான அனைத்​து கட்​சி ஆலோசனை கூட்டம் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x