Published : 02 Jul 2025 08:14 AM
Last Updated : 02 Jul 2025 08:14 AM

ரசாயன ஆலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக உயர்வு: தலா ரூ.1 கோடி நிதி உதவி

ஹைதராபாத்: தெலங்​கா​னா​ மாநிலத்தில் உள்ள சிகாச்சி ரசாயன ஆலை​யில் உள்ள ரியாக்​டர் நேற்று முன்தினம் வெடித்துசிதறியது. இந்த விபத்​தில் சம்பவ இடத்​தில் 5 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். படு​கா​யம் அடைந்த 60-க்​கும் மேற்​பட்​டோர் அரு​கில் உள்ள மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டனர்.

இதில் பலர் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தனர். சிகாச்சி ஆலை​யின் துணை தலை​வர் எல்​.எஸ் கோஹன் உட்பட இது​வரை 36 பேர் உயி​ரிழந்துள்​ளனர். தெலங்​கானா மாநில முதல்​வர் ரேவந்த் ரெட்டி நேற்று விபத்து நடந்த ஆலையை ஆய்வு செய்​தார். பின்னர், மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரும் தொழிலா​ளர்​களை சந்​தித்து ஆறு​தல் கூறி​னார்.

அதன் பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: விபத்து தொடர்​பாக சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​களிடம் ஆலோ​சனை நடத்​தினேன். உயி​ரிழந்​தவர்​களின் சடலங்​களை சொந்த ஊர்​களுக்கு அனுப்பி வைப்​பது, காயமடைந்​தவர்​களுக்கு சிறந்த முறை​யில் சிகிச்சை அளிப்​பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்​தர​விட்​டுள்​ளேன். இந்த சம்​பவம் மிக​வும் துர​திருஷ்ட​வசமானது. இதில் பலர் உயி​ரிழந்​துள்​ளனர்.

உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தில் உள்ள பிள்​ளை​களின் கல்வி செலவு முழு​வதை​யும் அரசே ஏற்​கும். உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​துக்கு உடனடி​யாக ரூ.1 லட்​சம் நிதி உதவி வழங்​கப்​படும். மேலும், தலா ரூ.1 கோடி நிதி உதவி​யும் வழங்​கப்​படும். உடல் உறுப்புகளை இழந்து சிகிச்சை பெற்று வரு​வோருக்கு தலா ரூ.10 லட்​ச​மும், சாதாரண காயம் அடைந்​தோருக்கு தலா ரூ.1 லட்​ச​மும் நிதி உதவி அளிக்​கப்​படும். விபத்து நடந்​த​போது 143 தொழிலா​ளர்​கள் பணி​யில் இருந்​துள்​ளனர். இவர்​களில் 36 பேர் இது​வரை இறந்துள்ளனர்.

17 பேரை காண​வில்லை என அதி​காரிகள் தெரிவிக்​கின்​றனர். இடி​பாடு​களில் இன்​ன​மும் யாரேனும் சிக்கி இருக்​கலாம் என அஞ்சப்​படு​கிறது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார். ஆலை விபத்​தில் உயி​ரிழந்​தோரின் உடல்​கள் அடை​யாளம் காண முடி​யாத நிலை​யில் உள்​ளன. எனவே டிஎன்ஏ பரிசோதனை நடத்தி உடல்​களை உறவினர்​களிடம் ஒப்​படைக்க அதி​காரி​கள் முடிவு செய்துள்ளனர்.

இளம் தம்​பதி உயி​ரிழப்பு: ஆந்​தி​ரா​வின் கடப்பா மாவட்​டம் ஜம்​மலமடுகு பகு​தியை சேர்ந்த நிகில் ரெட்​டி​யும் அதே பகு​தியை சேர்ந்த ரம்​யா​வும் காதலித்து வந்​தனர். குடும்​பத்​தினர் எதிர்ப்பை மீறி கடந்த 2 மாதங்​களுக்கு முன்​னர் இரு​வரும் திரு​மணம் செய்து கொண்​டனர்.

பின்​னர் இந்த இளம் தம்​ப​தி, சிகாச்சி ஆலை பணி​யில் சேர்ந்​துள்​ளனர். இந்நிலையில் வெடி விபத்​தில் இரு​வரும் உயிரிழந்துள்ளனர். இவர்​களின் காதல் திரு​மணத்தை தொடர்ந்து இரு வீட்​டாரும் இணைந்து புது மணத் தம்​ப​திக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்​திருந்​தனர்​. அதற்​குள்​ இரு​வரும்​ விபத்​தில்​ சிக்​கி உயி​ரிழந்​துள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x