Published : 02 Jul 2025 07:48 AM
Last Updated : 02 Jul 2025 07:48 AM

காற்றுத் தர மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி டெல்லியில் 62 லட்சம் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்படவில்லை

புதுடெல்லி: தலைநகர் டெல்​லி​யில் 10 ஆண்​டு​களுக்கு மேற்​பட்ட டீசல் வாக​னங்​கள், 15 ஆண்​டு​களுக்கு மேற்​பட்ட பெட்​ரோல் வாக​னங்​களுக்கு நேற்று முதல் எரிபொருள் வழங்​கப்​பட​வில்​லை. தலைநகர் டெல்​லி​யில் காற்று மாசு அதி​க​மாக இருப்​ப​தில் வாகனங்​கள் பெரும் பங்கு வகிக்​கின்​றன. டெல்​லி​யில் காற்று மாசுவை கட்​டுப்​படுத்த பல நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

இதனால் பழமை​யான வாக​னங்​கள் டெல்​லி​யில் இயக்​கப்​படு​வதை தடுத்து நிறுத்த காற்​றுத் தர மேலாண்மை ஆணை​யம் உத்​தரவு ஒன்றை பிறப்​பித்​தது. 10 ஆண்டு பழமை​யான டீசல் வாக​னங்​கள், 15 ஆண்டு பழமை​யான பெட்​ரோல் வாக​னங்​கள் ஆயுள் முடிந்​தவை​யாக கருதப்​பட்டு அவை​கள் தேசிய தலைநகர் மண்​டலத்​தில் (என்​சிஆர்) இயக்​கப்​படு​வதை தடுக்க உத்​தர​விட்​டது.

இதையடுத்து இந்த உத்​தரவு டெல்​லி​யில் நேற்று முதல் அமலுக்கு வந்​தது. டெல்​லி​யில் உள்ள 498 எரிபொருள் நிலை​யங்​களில் தானி​யங்கி நம்​பர்​பிளேட் அடை​யாள கேமி​ராக்​கள் பொருத்​தப்​பட்​டன. இந்த கேமி​ராக்​களில் வாக​னங்​களின் தரவு​களும் இணைக்​கப்​பட்​டுள்​ளன.

இது வாக​னத்​தின் பதிவு எண்ணை சரி​பார்த்து எரிபொருள் நிலை​யங்​களுக்கு எச்​சரிக்கை அனுப்​பும். மேலும் அங்கு போலீ​ஸார், போக்​கு​வரத்து துறை​யினரும் நிறுத்​தப்​பட்டு வாக​னங்​கள் கண்​காணிக்​கப்​படு​கின்​றன. பழமை​யான வாக​னங்​கள் கண்​டறியப்​பட்டு அதற்கு எரிபொருள் வழங்​கப்​பட​வில்​லை. இதில் இரு சக்கர வாக​னங்​கள் உட்பட அனைத்து வாக​னங்​களும் அடக்​கம்.

இது குறித்து பெட்​ரோல் பங்க் டீலர் ஒரு​வர் கூறுகை​யில், ‘‘இது​போன்ற பெரிய திட்​டத்தை அமல்​படுத்​து​வதற்கு முன் பரிசோதனை நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டிருக்க வேண்​டும். கண்​காணிப்பு குழு​வினர் எத்​தனை நாட்​கள் இந்த பணி​யில் ஈடு​படுத்​தப்​படு​வர்? இத்​திட்​டத்தை தேசிய தலைநகர் மண்​டலம் முழு​வதும் ஒரே நேரத்​தில் அமல்​படுத்​தி​யிருக்க வேண்​டும்’’ என்றார்.

வாகன ஒட்டி ஒரு​வர் கூறுகை​யில், ‘‘இத்​திட்​டம் பற்றி அறி​யாதவர்​களுக்கு இது மிகப் பெரிய பிரச்​சினை. படிக்​காதவர்​களிடம் இது குறித்து விழிப்​புணர்வு ஏற்​படுத்த எது​வும் செய்​யப்​பட​வில்​லை. சுற்​றுச்​சூழலுக்கு பாதிப்பு ஏற்​படுத்​தாமல் நல்ல நிலை​யில் உள்ள பல வாக​னங்​கள் உள்​ளன? இவற்றை திடீரென மாற்ற வேண்​டும் என்​றால் வாகன ஓட்​டிகளுக்கு மிகப் பெரிய செலவு ஏற்​படும். இதற்கு பதில் மாசு கட்​டுப்​பாடு சான்​றிதழ் அவசி​யம் என்ற நடை​முறையை கொண்​டு வந்​திருக்​கலாம்​’’ என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x