Published : 01 Jul 2025 06:29 AM
Last Updated : 01 Jul 2025 06:29 AM
அகமதாபாத்: குஜராத் மாநிலம் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமன் நாட்டின் ஷினாஸ் துறைமுகம் நோக்கி 'எம்டி யி செங் 6’ என்ற எண்ணெய் கப்பல் சென்று கொண்டிருந்தது. பலாவு நாட்டு கொடியுடன் சென்ற இந்த கப்பலில் இந்திய மாலுமிகள் 14 பேர் இருந்தனர்.
இந்த கப்பலின் இன்ஜின் அறையில் திடீரென தீப்பற்றியது. இதுகுறித்து ஓமன் வளைகுடாவில் இருந்த, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் தபார் போர்க் கப்பலுக்கு நேற்று முன்தினம் தகவல் தெரிவிக்கப்பட்டு, உதவி கோரப்பட்டது. இதையடுத்து ஐஎன்எஸ் தபாரில் இருந்து தீயணைப்பு சாதனங்களுடன் இந்திய கடற்படை வீரர்கள் படகு மற்றும் ஹெலிகாப்டரில் விரைந்து சென்று தீயை அணைத்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT