Last Updated : 01 Jul, 2025 12:27 AM

 

Published : 01 Jul 2025 12:27 AM
Last Updated : 01 Jul 2025 12:27 AM

65 ஆண்டுக்கு பிறகு ஜூன் மாதத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பியது: பூஜை செய்து வழிபட்ட சித்தராமையா

பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான‌ குடகு, மைசூரு, மண்​டியா ஆகிய இடங்களில் கடந்த மே மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து கனமழை பெய்தது. இதனால் கிருஷ்ண​ராஜ​சாகர், ஹேமாவ​தி, ஹாரங்கி ஆகிய அணை​களுக்கு நீர்​வரத்து அதி​கரித்​தது. இதே​போல காவிரி​யின் துணை ஆறான கபிலா உற்​பத்​தி​யாகும் கேரளா​வின் வயநாட்​டிலும் கனமழை பெய்​தது. இதனால் மைசூரு​வில் உள்ள கபினி அணைக்கு நீர்​வரத்து தொடர்ந்து அதி​கரித்​தது. இதன் காரண​மாக காவிரி நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் அமைந்​துள்ள கிருஷ்ண​ராஜ​சாகர், கபினி, ஹேமாவ​தி, ஹாரங்கி அணை​களின் நீர்​மட்​ட​மும் உயர்ந்​தது.

மண்​டியா மாவட்​டம் ஸ்ரீரங்​கபட்​ணா​வில் உள்ள கிருஷ்ண​ராஜ சாகர் நேற்று முன் தினம் இரவு முழு கொள்​ளளவை (124.80 அடி) எட்​டியது. இதையடுத்து முதல்​வர் சித்​த​ராமை​யா, துணை முதல்​வர் டி.கே.சிவகு​மார், அமைச்​சர்​கள் மகாதேவப்​பா, செலு​வ​ராய​சாமி ஆகியோர் நேற்று பிற்​பகல் 1.30 மணிக்கு கிருஷ்ண​ராஜ​சாகர் அணை​யில் உள்ள காவிரி அன்​னை​யின் சிலைக்கு பாகினா சமர்ப்​பணப் பூஜை செய்​தனர்.

மேகே​தாட்​டு​வில் அணை: பின்​னர் சித்​த​ராமையா செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கடந்த 1960-ம் ஆண்டு ஜூன் மாதத்​தில் கிருஷ்ண​ராஜ சாகர் அணை முழு கொள்​ளளவை எட்​டியது. அதன் பிறகு 65 ஆண்​டு​களுக்கு பின்​னர் நிகழாண்​டில் ஜூன் மாதத்​திலேயே அணை நிரம்​பி​யுள்​ளது. கனமழை பெய்​த​தால் அண்டை மாநிலங்​களு​டன் நீர் பங்​கீட்​டில் எந்த பிரச்​சினை​யும் ஏற்​ப​டாது என நினைக்​கிறேன். இனி வரு​கின்ற நாட்​களில் அணைக்கு வரும் நீரை மொத்​த​மாக தமிழகத்​துக்கு திறந்​து​விட போகிறோம். மேட்​டூர் அணை​யும் முழு கொள்​ளளவை நெருங்​கி​யுள்​ளது. தமிழக அரசிடம் காவிரி நீரை தேக்கி வைக்க அணை​கள் இல்​லை. அவ்​வளவு நீரும் கடலுக்கு தான் போய் சேரும்.

மேகே​தாட்​டு​வில் புதி​தாக அணை கட்​டி​னால் மழை காலங்​களில் கடலுக்கு வீணாக போகும் நீரை நாம் சேமிக்க முடி​யும். இதனால் இரு மாநில விவ​சா​யிகளும் பயனடை​வார்​கள். தமிழக அரசிட​மும் மத்​திய அரசிட​மும் பேச்​சு​வார்த்தை நடத்தி மேகேதாட்​டு​வில் அணை கட்​டப்​படும். இவ்​வாறு சித்​த​ராமையா தெரி​வித்​தார்.

காவிரி​யில் வெள்​ளப்​பெருக்கு: கிருஷ்ண​ராஜ​சாகர் அணை, கபினி அணை​களில் இருந்​து மொத்​த​மாக விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி நீர் தமிழகத்​துக்​கு செல்​வ​தால்​ கா​விரி ஆற்​றில்​ வெள்​ளப்​பெருக்​கு ஏற்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x