Published : 30 Jun 2025 07:35 AM
Last Updated : 30 Jun 2025 07:35 AM

ஒடிசாவின் புரி ரதயாத்திரை கூட்ட நெரிசலில் 3 பக்தர்கள்  உயிரிழப்பு

ஒடிசாவில் புரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், புரி மருத்துவமனையின் பிரேத பரிசோதனை அறை முன் கதறி அழுகின்றனர். | படம்: பிடிஐ |

புரி: உல​கம் புகழ்​பெற்ற ஒடி​சா​வின் புரி ஜெகந்​நாதர் கோயில் ரத யாத்​திரை 2 நாட்​களுக்கு முன் தொடங்​கியது. புரி​யில் உள்ள குடிச்சா கோயில் அருகே நேற்று காலை 4 மணிக்கு ரத யாத்​திரை ஊர்​வலம் வந்​தது. அலங்​கரிக்​கப்​பட்ட ரதத்தை காண ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் ஒரே இடத்​தில் குவிந்​திருந்​தனர்.

பக்​தர்​கள் கூட்​டம் அதி​கம் இருந்த பகு​தி​யில் ரதயாத்​திரை​யில் பங்​கேற்​கும் இரண்டு வாக​னங்​கள் உள்ளே நுழைந்​தன. அப்​போது ஏற்​பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பிரேமகந்த் மொகந்தி (80), வசந்தி சாகு (36), பிரபதி தாஸ் (42) ஆகியோர் உயி​ரிழந்​தனர். 50-க்​கும் மேற்​பட்ட பக்​தர்​கள் காயம் அடைந்​தனர்.

கூட்ட நெரிசலை கட்​டுப்​படுத்த, காவல்​துறை அதி​காரி​கள் முறை​யான நடவடிக்கை மேற்​கொள்​ளவில்லை, விஐபிக்​களின் தரிசனத்​துக்கு காவல்​துறை ஏற்​பாடு செய்​ததே கூட்ட நெரிசலுக்கு காரணம் என கூறப்​படு​கிறது.

ரூ.25 லட்​சம் உதவித் தொகை: இச்​சம்​பவத்​துக்கு வருத்​தம் தெரி​வித்த ஒடிசா முதல்​வர் மோகன் சரண் மாஜி, உயி​ரிழந்த பக்தர்களின் குடும்​பத்​துக்கு ரூ.25 லட்​சம் நிதி​யுதவி அறி​வித்​தார். பக்​தர்​களின் பாது​காப்​பில் அலட்​சி​ய​மாக இருந்த புரி காவல் துணை ஆணை​யர் விஷ்ணு சரண் பாதி மற்​றும் கமாண்​டென்ட் அஜய் பதி ஆகியோரை சஸ்​பெண்ட் செய்​ய​வும், மாவட்ட ஆட்சியர் சித்​தரர்த் ஸ்வைன், எஸ்​.பி. பினிட் அகர்​வால் ஆகியோரை பணி​யிட மாற்​றம் செய்​ய​வும் முதல்​வர் மோகன் சரண் உத்​தர​விட்​டார். பாது​காப்பு குறை​பாடு​களுக்கு காரண​மானவர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் எனவும் அவர் உறுதி அளித்தார்.

எக்ஸ் தளத்​தில் அவர் விடுத்​துள்ள இரங்​கல் செய்​தி​யில், ‘‘மகா பிரபு ஜெகந்​நாதரை தரிசனம் செய்ய வேண்​டும் என்ற தீவிர ஆர்வம் பக்​தர்​கள் இடையே ஏற்​பட்​ட​தால் இந்த துரதிர்​ஷ்ட​மான சம்​பவம் ஏற்​பட்​டுள்​ளது. இதற்​காக ஜெகந்​நாதர் பக்​தர்​களிடம் நானும், எனது அரசும் மன்​னிப்பு கோரு​கிறோம். உயி​ரிழந்த பக்​தர்​களின் குடும்​பத்​தினருக்கு நாங்​கள் இரங்​கலை தெரி​வித்​துக் கொள்​கிறோம். அவர்​களுக்கு இந்த சோகத்தை தாங்​கக்​கூடிய மனவலிமையை ஜெகந்​நாதர் அளிக்க வேண்​டும்​ என வேண்​டிக்​ கொள்​கிறேன்​’’ என தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x