Published : 09 Jun 2025 07:20 AM
Last Updated : 09 Jun 2025 07:20 AM

உ.பி. பிருந்தாவனம் பங்கி பிஹாரி கோயிலில் ரூ.20 லட்சம் வைர நகையை தூக்கி சென்ற குரங்கு

ஆக்ரா: உ.பி. கோயி​லில் குரங்கு தூக்கி சென்ற பெண் பக்​தரின் கைப்​பையை, 8 மணி நேர தேடு​தல் வேட்​டைக்​குப் பிறகு போலீ​ஸார் கண்​டு​பிடித்​தனர். உத்தர பிரதேச மாநிலம் மதுரா மாவட்​டத்​தில் உள்ளது பிருந்​தாவன் பங்கி பிஹாரி கோயில். பிருந்​தாவன் நகரில் அமைந்​துள்ள இக்​கோயி​லில் ராதாகிருஷ்ணர் மூல​வ​ராக இருக்​கிறார்.

இக்​கோ​யிலுக்கு தின​மும் ஏராள​மான பக்​தர்​கள் வந்து செல்​கின்​றனர். அலிகரை சேர்ந்த அபிஷேக் அகர்​வால் என்​பவர் தனது மனைவி மற்​றும் குடும்​பத்​தினருடன் கடந்த வியாழக்​கிழமை பங்கி பிஹாரி கோயிலுக்கு வந்​தார். சுவாமி தரிசனம் முடித்​து​விட்டு அனை​வரும் கோயி​லில் இருந்து வெளி​யில் வந்​தனர்.

அப்​போது எங்​கிருந்தோ திடீரென வந்த குரங்கு ஒன்​று, அபிஷேக் மனைவி வைத்​திருந்த கைப்​பையை பிடுங்​கிக் கொண்டு ஓடியது. அதை பார்த்த அனை​வரும் அதிர்ச்சி அடைந்​தனர். அந்த பையில் வைர நெக்​லஸ் உட்பட ரூ.20 லட்​சம் மதிப்​புள்ள வைர நகைகள் இருந்​தன. உடனடி​யாக போலீ​ஸாருக்கு தகவல் அளிக்​கப்​பட்​டது. உள்​ளூர் மக்​களும் போலீ​ஸாரும் விரைந்து வந்து குரங்கை தேட ஆரம்​பித்​தனர். அதற்​குள் அந்த குரங்கு மரத்​துக்கு மரம் தாவி சென்று விட்​டது.

அதன்​பின், போலீ​ஸார் அந்​தப் பகு​தி​யில் உள்ள சிசிடிவி கேம​ராக்​களை ஆய்வு செய்​தனர். ஒரு குழு​வினர் குரங்கு சென்ற பகு​தி​களில் தேட ஆரம்​பித்​தனர். சுமார் 8 மணி நேர தேடு​தல் வேட்​டைக்​குப் பிறகு அபிஷேக் மனை​வி​யின் கைப்​பை, ஒரு புதரில் விழுந்து கிடந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. அந்​தப் பையை மீட்டு அபிஷேக்​கிடம் போலீ​ஸார் ஒப்​படைத்​தனர். இத்​தகவலை மதுரா டிஎஸ்பி சதார் சந்​தீப் குமார் சிங் நேற்று தெரி​வித்​தார்.

பிருந்​தாவன் கோயி​லில் இது​போல் நடப்​பது இது முதல் முறை அல்ல. கடந்த 2015-ம் ஆண்டு மும்பை பெண் ஒரு​வரிடம் இருந்த கைப்​பையை குரங்கு ஒன்று பிடுங்கி சென்​றது. பையில் என்ன இருக்​கிறது என்று அந்த குரங்கு புரட்டி புரட்டி பார்த்​தது. அப்​போது பையில் இருந்த ரூ.1.5 லட்​சம் பணம் அங்​கிருந்த பக்​தர்​கள் மீது கொட்​டியது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x