Last Updated : 06 Jun, 2025 05:56 AM

1  

Published : 06 Jun 2025 05:56 AM
Last Updated : 06 Jun 2025 05:56 AM

கர்நாடக அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்: ஐபிஎல் வெற்றி விழாவில் தமிழக பெண் உட்பட 11 ரசிகர்கள் உயிரிழந்த விவகாரம்

நெரிசலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கண்ணீர் விட்டு கலங்குகின்றனர் | படங்கள்: பிடிஐ

பெங்களூரு: ஐபிஎல் போட்​டி​யில் ஆர்​சிபி அணி​யின் வெற்​றியை கொண்​டாடும் வகை​யில் பெங்​களூரு​வில் நடந்த விழா​வில் தமிழக பெண் உட்பட 11 ரசிகர்​கள் உயி​ரிழந்த சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. போதிய பாது​காப்பு ஏற்​பாடு​களை மேற்​கொள்​ளாமல் அவசர கதி​யில் விழாவை நடத்​தி​யது ஏன் என்று கர்​நாடக உயர் நீதி​மன்​றம் கேள்வி எழுப்​பி​யுள்​ளது. இதுதொடர்​பாக கர்​நாடக அரசு, பெங்​களூரு காவல் ஆணை​யர், ஆட்​சி​யர், ஐபிஎல், பிசிசிஐ நிர்​வாகி​கள் பதில் அளிக்க உத்​தர​விட்​டுள்​ளது.

ஐபிஎல் கிரிக்​கெட் தொடரில் இறுதி போட்​டி​யில் வென்ற ஆர்​சிபி (ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு) அணிக்கு பெங்​களூரு​வில் நேற்று முன்​தினம் விதானசவுதா வளாகத்​தி​லும், சின்​ன​சாமி கிரிக்​கெட் ஸ்டேடி​யத்​தி​லும் வெற்றி விழா நடை​பெற்​றது. சின்​ன​சாமி ஸ்டேடி​யத்​தில் ஏற்​பட்ட கூட்ட நெரிசலில் தமிழகத்தின் உடுமலைப்பேட்டையை சேர்ந்த இளம்பெண் காமாட்சி உட்பட 11 ரசிகர்கள் உயி​ரிழந்​தனர். இந்த சம்​பவம் பெரும் சோகத்தை ஏற்​படுத்​தி​யது.

இந்​நிலை​யில், கர்​நாடக உயர்​ நீ​தி​மன்​றம் நேற்று இந்த வழக்கை தாமாக‌ முன்வந்து விசா​ரித்​தது. தலைமை நீதிபதி காமேஷ்வர் ராவ், நீதிபதி சி.எம்​.ஜோஷி அமர்வில் விசா​ரணை நடைபெற்றது. அதன் விவரம்:

தலைமை நீதிப​தி: இந்த நெரிசல் உயி​ரிழப்பை சாதா​ரண​மாக எடுத்​துக்​கொள்ள முடி​யாது. தண்​டனைக்​குரிய அலட்​சி​ய​மாகவே கருத வேண்​டி உள்​ளது. ஆர்​சிபி அணி​யின் வெற்​றியை அடுத்த நாளே கொண்​டாட வேண்​டிய அவசி​யம் என்ன? எதற்​காக பேரணி, வெற்றி விழா என இரண்டு நிகழ்ச்​சிகள் ஏற்​பாடு செய்​யப்​பட்​டன? இந்த நிகழ்ச்​சிக்கு ஏற்​பாடு செய்​தவர்​கள் யார்​?

கர்​நாடக அரசு தரப்​பில் அட்​வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி: வெளி​நாட்டு வீரர்​கள் தாய்நாடு திரும்ப வேண்​டி​ இருந்​தது. அதனால், விரை​வாக வெற்றி விழா நடத்த வேண்​டும் என ஆர்​சிபி அணி தரப்​பில் கூறப்பட்டது. நெரிசல் ஏற்​படும் என கணித்​தே, திறந்​தவெளி வாகன ஊர்​வலத்​துக்கு அரசு அனு​மதி மறுத்​தது. சின்​ன​சாமி ஸ்டேடி​யத்​தில் 35 ஆயிரம் பேர் மட்​டுமே உட்​கார முடி​யும். ஆனால் சுமார் 2.50 லட்​சம் ரசிகர்​கள் குவிந்து விட்​டனர். அளவுக்கு அதி​க​மான கூட்​டம் கூடிய​தால் இந்த துயர சம்​பவம் நடந்​து​விட்​டது.

மூத்த வழக்​கறிஞர் அருண் ஷ்யாம்: கிரிக்​கெட் ஸ்டேடி​யத்​தில் 21 நுழைவு வா​யில்​கள் உள்​ளன. ஆனால், 6, 7, 8-ம் எண் நுழை​வு வா​யில்கள் மட்​டுமே பொது​மக்​களுக்​காக திறக்​கப்​பட்​டிருந்​தன. அதனால், அவற்றின் அருகே அதிக கூட்ட நெரிசல் ஏற்​பட்​டது. முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக போதிய போலீ​ஸாரும், ஆம்​புலன்ஸ் வசதி​யும் ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்​தால் இந்த உயி​ரிழப்​பு​களை தடுத்​திருக்க முடி​யும்.

நீதிப​தி: போதிய போலீ​ஸாரை ஏன் பாது​காப்பு பணி​யில் அமர்த்​த​வில்​லை? ஆம்​புலன்ஸ், முதலுதவி குழுக்​கள் போன்​றவற்றை ஏன் ஏற்​பாடு செய்​ய​வில்​லை? இந்த உயி​ரிழப்​பு​களை தடுக்​கும் முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை ஏன் எடுக்​க​வில்லை?

அரசு வழக்​கறிஞர்: ஆம்​புலன்ஸ் வசதி ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்​தது. ஆனால், கூட்​டம் அதி​க​மாக வந்​த​தால் அவை போது​மான​தாக இல்​லை. அதே​போல, பாது​காப்​பு பணியில் சுமார் 5 ஆயிரம் போலீ​ஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இவ்வாறு வாதம் நடந்தது.

இதையடுத்து நீதிப​திகள், ‘‘இந்த சம்​பவம் தொடர்​பாக கர்​நாடக அரசு, பெங்​களூரு காவல் ஆணை​யர், ஆட்​சி​யர், ஐபிஎல், பிசிசிஐ, கர்​நாடக கிரிக்​கெட் நிர்​வாகி​கள் ஜூன் 10-ம் தேதிக்​குள் பதில் அளிக்க வேண்​டும்’’ என்று உத்தரவிட்டு வழக்கு விசா​ரணையை தள்​ளி​வைத்​தனர்.

மாவட்ட ஆட்​சி​யர் நோட்​டீஸ்: இதற்கிடையே, கூட்ட நெரிசலில் 11 பேர் உயி​ரிழந்​தது குறித்து கர்​நாடக அரசு நீதி விசா​ரணைக்கு உத்​தர​விட்​டுள்​ளது. இதையடுத்து, ஆர்​சிபி நிர்​வாகம், கர்​நாடக மாநில‌ கிரிக்​கெட் சங்​கம், நிகழ்ச்​சியை ஏற்​பாடு செய்த டிஎன்ஏ நிறு​வனம் ஆகிய​வற்​றுக்கு பெங்​களூரு மாவட்ட ஆட்​சி​யர் ஜெகதீஷ் நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ளார்.

கூட்ட நெரிசலில் உயி​ரிழந்த 11 பேரும் தனித்​தனி​யாக இயற்​கைக்கு மாறான வகை​யில் மரணம் அடைந்​த​தாக கப்​பன் பூங்கா போலீ​ஸார் வழக்​கு ​ப​திவு செய்​தனர். இதற்கு பாதிக்​கப்​பட்​டோரின் குடும்​பத்​தினரும், வழக்​கறிஞர்​களும் கடும் எதிர்ப்பு தெரி​வித்​தனர்.

இதையடுத்து, கப்​பன் பூங்கா காவல் ஆய்​வாளர் கிரீஷ் அளித்த புகாரின்​பேரில், ஆர்​சிபி அணிக்கு பாராட்டு விழா ஏற்​பாடு செய்த ஆர்​சிபி நிர்​வாகம், கர்​நாடக மாநில‌ கிரிக்​கெட் சங்​கம், நிகழ்ச்​சியை ஏற்​பாடு செய்த டிஎன்ஏ நிறு​வனம் ஆகிய​வற்​றின் மீது பிரிவு 105 (கொலைக்கு காரண​மாக இருத்​தல்), 190 (சட்ட விரோத கூடு​தலுக்கு பொறுப்பேற்​பது), 125 (அலட்​சி​ய​மாக செயல்​பட்டு உயிருக்கு ஆபத்தை விளை​வித்​தல்) உட்பட 5 பிரிவுகளில் வழக்​கு பதிவு செய்துள்ளனர்.

குன்ஹா தலைமையில் விசாரணை ஆணையம்: கூட்ட நெரிசல் வழக்கை விசாரிக்க‌ உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பெங்களூரு மாநகர காவல் ஆணையர் பி.தயானந்தா, கூடுதல் ஆணையர் விகாஷ் குமார், மத்திய மண்டல துணை ஆணையர் சேகர்.எச், உதவி ஆணையர் பாலகிருஷ்ணா ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x