Published : 05 Jun 2025 08:00 AM
Last Updated : 05 Jun 2025 08:00 AM

2026 அக்.1, 2027 மார்ச் 1 ஆகிய தேதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2 கட்டமாக தொடங்கும்: உள்துறை அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: ​​நாடு முழு​வதும் 2026 அக்​டோபர் 1, 2027 மார்ச் 1 ஆகிய தேதி​களில் 2 கட்​டங்​களாக மக்​கள் தொகை கணக்​கெடுப்​புப் பணி தொடங்​கும் என மத்​திய உள்துறை அமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது. இந்​தி​யா​வில் 10 ஆண்​டு​களுக்கு ஒரு முறை மக்​கள் தொகை கணக்​கெடுப்பு நடத்​தப்​பட்டு வரு​கிறது. கடைசி​யாக 2011-ம் ஆண்டு மக்​கள் தொகை கணக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டது.

இதற்கு அடுத்​த​படி​யாக 2021-ம் ஆண்டு மக்​கள் தொகை கணக்​கெடுப்​புக்​கான பணி​கள் 2020 ஏப்​ரல் மாதத்​தில் தொடங்​கு​வதற்​கான ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டன. ஆனால், கரோனா பெருந்​தொற்று பரவியதையடுத்​து, இப்​பணி தள்ளி வைக்​கப்​பட்​டது. அதன் பிறகு மக்​கள​வைத் தேர்​தல் நடை​பெற்​ற​தால் மீண்​டும் தள்​ளிப்​போனது.

இதனிடையே, நாடு முழு​வதும் சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்த வேண்​டும் என காங்​கிரஸ், திமுக உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் கோரிக்கை வைத்​தன. இந்த சூழ்​நிலை​யில், அரசி​யல் விவ​காரங்​களுக்​கான மத்​திய அமைச்​சரவை (சிசிபிஏ) கூட்​டம் பிரதமர் நரேந்​திர மோடி தலை​மை​யில் கடந்த ஏப்​ரல் 30-ம் தேதி நடை​பெற்​றது.

இதையடுத்து செய்​தி​யாளர்​களுக்கு பேட்​டியளித்த மத்​திய அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ், மக்​கள் தொகை கணக்​கெடுப்​புடன் சாதி​வாரி கணக்​கெடுப்பை இணைக்க மத்​திய அமைச்​சரவை ஒப்​புதல் வழங்கி இருப்​ப​தாக தெரி​வித்​தார்.

இந்த சூழ்​நிலை​யில், மத்​திய உள் துறை அமைச்​சகம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: நாடு முழு​வதும் சாதி​வாரி தகவலுடன் கூடிய மக்​கள் தொகை கணக்​கெடுப்பை 2 கட்​டங்​களாக தொடங்​கு​வது என முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. முதல் கட்​ட​மாக மலைப்​பாங்​கான மற்​றும் பனிப்​பொழிவு அதி​கம் உள்ள லடாக், ஜம்மு காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்​கள் மற்​றும் உத்​த​ராகண்ட், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்​களில் 2026-ம் ஆண்டு அக்​டோபர் 1-ம் தேதி மக்​கள் தொகை கணக்​கெடுப்பு தொடங்​கும். மற்ற மாநிலங்​களில் 2027-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி இப்​பணி​கள் தொடங்​கும்.

இது தொடர்​பாக அதி​காரப்​பூர்​வ​மான அறி​விப்பு வரும் 16-ம் தேதி வெளி​யிடப்​படும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது. இந்​தி​யா​வில் பிரிட்​டிஷ் ஆட்​சி​யின்​போது கடந்த 1931-ம் ஆண்டு சாதி​வாரி கணக்​கெடுப்​பு நடத்​தப்​பட்​டது. 94 ஆண்​டு​களுக்​குப்​ பிறகு ​தற்போது சா​தி​வாரி கணக்​கெடுப்​பு நடை​பெற உள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x