Published : 03 Jun 2025 07:21 AM
Last Updated : 03 Jun 2025 07:21 AM

2 நாட்கள் ‘டிஜிட்டல் அரஸ்ட்’ செய்து 80 வயது மூதாட்டியிடம் ரூ.1.02 கோடி மோசடி

படம்: மெட்டா ஏஐ

இந்தூர்: மத்​திய பிரதேச மாநிலம் இந்​தூரின் துகோகஞ்ச் பகு​தி​யைச் சேர்ந்​தவர் நந்​தினி சிப்​லங்​கர் (80). இவர் பள்​ளி​யில் பணி​யாற்றி ஓய்வு பெற்​றுள்​ளார். இவரை 2 நாட்​கள் டிஜிட்​டல் அரஸ்ட் செய்து ரூ.1.02 கோடியை மோசடி கும்​பல் பறித்​துள்​ளது. இதுகுறித்து இந்​தூர் குற்​றப் பிரிவு டிசிபி ராஜேஷ் தண்​டோ​தியா நேற்று கூறிய​தாவது:

கடந்த மே 27-ம் தேதி மர்ம நபர்​கள் சிலர் நந்​தினி சிப்​லங்​கரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசி​யுள்​ளனர். அப்​போது மும்பை கொலாபா போலீஸ் என்​றும் சிபிஐ அதி​காரி​கள் என்​றும் தங்​களை அறி​முகப்​படுத்தி கொண்​டுள்​ளனர். மேலும், ஜெட் ஏர்​வேஸ் நிறு​வனர் நரேஷ் கோயலுடன் நந்​தினி பணப் பரிவர்த்​தனை வைத்​துள்​ள​தாக​வும், சட்​ட​விரோத பணப் பரிவர்த்​தனை​யில் ஈடு​பட்​டுள்​ள​தாக​வும் மர்ம நபர்​கள் கூறி​யுள்​ளனர்.

இதுதொடர்​பாக நந்​தினி மீது 267 எப்​ஐஆர் பதிவு செய்​யப்​பட்​டுள்​ள​தாக​வும் மிரட்டி அவரை 2 நாட்​கள் டிஜிட்​டல் அரஸ்ட் செய்​து ரூ.1.2 கோடியை பறித்துள்ளனர். தொடர்ந்து அந்த கும்​பல் மிரட்​டிய நிலை​யில், வங்​கிக்கு சென்று தனது வைப்பு நிதி ரூ.50 லட்​சத்தை நந்​தினி எடுக்க முயற்​சித்​துள்​ளார். ஆனால், சந்​தேகம் அடைந்த வங்கி மேலா​ளர் உடனடி​யாக போலீஸுக்கு தகவல் அளித்​தார். உடனடி​யாக போலீ​ஸார் நந்​தினியை சந்​தித்து மோசடி கும்பல் குறித்து நந்​தினிக்கு புரிய வைத்தனர். அதனால் அவருடைய வைப்பு நிதி ரூ.50 லட்​சம் பறி​போவது தடுக்​கப்​பட்​டது. இவ்​வாறு டிசிபி ராஜேஷ் கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x