Published : 28 May 2025 06:57 AM
Last Updated : 28 May 2025 06:57 AM

இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்த உள்நாட்டு பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்: பிரதமர் மோடி அழைப்பு

அகமதாபாத்: இந்​தி​யா​வின் பொருளா​தா​ரத்தை வலுப்​படுத்த உள்​நாட்டு பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும் என்று பிரதமர் நரேந்​திர மோடி அழைப்பு விடுத்​துள்​ளார். குஜ​ராத் தலைநகர் காந்தி நகரில் நேற்று நடை​பெற்ற விழா​வில் ரூ.5,536 கோடி மதிப்​பிலான அரசு நலத் திட்​டங்​களை அவர் தொடங்​கி​வைத்​தார்.

சில திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார். விழா​வில் அவர் பேசி​ய​தாவது: இந்​தி​யா, பாகிஸ்​தான் பிரி​வினை​யின்​போது ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதி ஆக்​கிரமிக்​கப்​பட்​டது. அந்த பகு​தியை மீட்க சர்​தார் படேல் திட்​ட​மிட்​டார். ஆனால் அவரது திட்​டம், அறி​வுரை ஏற்​கப்​பட​வில்​லை. இதன்​ காரண​மாக கடந்த 75 ஆண்​டு​களுக்​கும் மேலாக எல்லை தாண்​டிய தீவிர​வாத பிரச்​சினையை எதிர்​கொண்டு வரு​கிறோம்.

இந்​தி​யா​வுடன் நேரடி போரில் வெற்றி பெற முடி​யாது என்​பது பாகிஸ்​தானுக்கு நன்​றாக தெரி​யும். இதன்​காரண​மாக தீவிர​வாதம் மூலம் அந்த நாடு மறை​முக போரில் ஈடு​பட்டு வரு​கிறது. பஹல்​காம் தாக்​குதலுக்கு பதிலடி​யாக பாகிஸ்​தானில் செயல்​பட்ட 9 தீவிர​வாத முகாம்​களை இந்​திய ராணுவம் 22 நிமிடங்​களில் அழித்​தது.

இந்த ராணுவ நடவடிக்கை வீடியோ​வில் பதிவு செய்​யப்​பட்​டது. கடந்த காலங்​களில் பாகிஸ்​தான் தீவிர​வாத முகாம்​கள் அழிக்​கப்​பட்​டதற்​கான ஆதா​ரங்​கள் கோரப்​பட்​டன. இப்​போது பகிரங்​க​மாக வீடியோ ஆதா​ரங்​களை வெளி​யிட்டு உள்​ளோம். இந்​திய ராணுவத்​தின் துல்​லிய தாக்​குதல்​களில் உயி​ரிழந்த தீவிர​வா​தி​களுக்கு பாகிஸ்​தான் ராணுவம் மரி​யாதை செலுத்​தி​யது. இதன்​மூலம் அந்த நாட்​டின் உண்மை முகம் அம்​பல​மாகி உள்​ளது.

சிந்து நதி நீர் ஒப்​பந்​தம்: 1960-ல் சிந்து நதி நீர் ஒப்​பந்​தம் ஏற்​படுத்​தப்​பட்​டது. இந்​தி​யா​வில் சிந்து நதி கட்​டமைப்​பு​களில் கட்​டப்​பட்ட அணை​கள் முறை​யாக தூர்​வாரப்​பட​வில்​லை. இப்​போது அணை​களை தூர்​வாரி நீர் இருப்பை அதி​கரித்து வரு​கிறோம். பாகிஸ்​தானுக்கு எதி​ராக இது​வரை நாம் எந்​தவொரு உறு​தி​யான நடவடிக்​கைகளை​யும் எடுக்​க​வில்​லை. ஆனால் அந்த நாடு இப்​போதே அச்​சத்​தில் வியர்த்து நடுங்கி கொண்​டிருக்​கிறது.

2014 மே 26-ம் தேதி பிரதம​ராக நான் பதவி​யேற்​றேன். அப்​போது உலகின் மிகப்​பெரிய பொருளா​தார நாடு​கள் பட்​டியலில் இந்​தியா 11-வது இடத்​தில் இருந்​தது. எனது ஆட்​சிக் காலத்​தில் கரோனா பெருந்​தொற்​று, இயற்கை பேரிடர்​கள், அண்டை நாடு​களு​டன் பல்​வேறு பிரச்​சினை​கள் எழுந்​தன. கரோ​னா​வுக்கு எதி​ரான போரில் வெற்றி பெற்​றோம். இயற்கை பேரிடர்​களை திறம்பட எதிர்​கொண்​டோம்.

அண்டை நாடு​களுடனான பிரச்​சினை​களுக்கு ராஜ்ஜியரீதியில் தீர்வு காணப்​பட்​டது. கரோனா பெருந்​தொற்று காலத்​தி​லும் நாட்​டின் பொருளா​தா​ரத்​தில் அதிதீ​விர கவனம் செலுத்​தப்​பட்​டது. இதன்​காரண​மாக உலகின் மிகப்​பெரிய பொருளா​தார நாடு​கள் பட்​டியலில் தற்​போது 4-வது இடத்​துக்கு இந்​தியா முன்​னேறி உள்​ளது. விரை​வில் 3-வது இடத்தை எட்​டிப் பிடிக்க தீவிர நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறோம். வரும் 2047-ம் ஆண்​டில் 100-வது சுதந்​திர தினத்தை கொண்​டாடு​வோம். அப்​போது வளர்ச்சி அடைந்த இந்​தி​யாவை உரு​வாக்க இலக்கு நிர்​ண​யித்து உள்​ளோம்.

சீன விநாயகர் சிலைகள்: இந்​திய பொருளா​தா​ரத்தை வலுப்​படுத்த ஒவ்​வொரு இந்​தி​யரும் உள்​நாட்டு தயாரிப்​பு​களை மட்​டுமே வாங்க வேண்​டும். ஒவ்​வொரு​வரும் அன்​றாடம் பயன்​படுத்​தும் பொருட்​கள் குறித்து ஆய்வு செய்ய வேண்​டும். அதில் அந்​நிய பொருட்​களை தவிர்க்க வேண்​டும். அதற்கு மாற்​றாக உள்​நாட்டு தயாரிப்​பு​களை வாங்க வேண்​டும். வெளி​நாட்​டில் (சீ​னா​வில் ) இருந்து விநாயகர் சிலைகள் இறக்​குமதி செய்​யப்​படு​கின்​றன. ஹோலி பண்​டிகை​யில் பயன்​படுத்​தப்​படும் வண்ண பொடிகளும் வெளி​நாடு​களில் இருந்து இறக்​குமதி செய்​யப்​படு​கிறது. இது மிக​வும் துர​திருஷ்டவசமானது.

இதை முற்​றி​லும் தவிர்க்க வேண்​டும். இந்​திய தயாரிப்​பு​களை மட்​டுமே பயன்​படுத்த வேண்​டும். வெளி​நாட்டு பொருட்​களை விற்க மாட்​டோம் என்று வியா​பாரி​கள் உறு​தி​யேற்க வேண்​டும். உள்​நாட்​டில் உற்​பத்தி செய்​யப்​படும் பொருட்​களை உலகத் தரத்​தில் தயாரிக்க வேண்​டும். பொருட்​களின் தரத்​தில் இந்​திய நிறு​வனங்​கள் அதிக அக்​கறை செலுத்த வேண்​டும்.

கடந்த 75 ஆண்​டு​களுக்கு முன்பு மகா​ராஷ்டி​ரா​வில் இருந்து குஜ​ராத் தனி​யாகப் பிரிக்​கப்​பட்​டது. அப்​போது குஜ​ராத் பின்​தங்​கிய நிலை​யில் இருந்​தது. கனிம வளம் இல்​லாத இந்த மாநிலம் எப்​படி முன்​னேறும் என்று சிலர் கேள்வி எழுப்​பினர். இப்​போது உப்பு முதல் வைரங்கள் வரை குஜ​ராத்​தில் உற்​பத்தி செய்​யப்படு​கின்றன. குஜ​ராத்​தின் வளர்​ச்​சியை ​பார்​த்​து ஒட்​டுமொத்​த உலக​மும்​ வியப்​பில்​ ஆழ்​ந்​திருக்​கிறது. வரும்​ 2036-ம்​ ஆண்​டில்​ இந்​தி​யா​வில்​ ஒலிம்​பிக்​ போட்​டிகளை நடத்​த திட்​ட​மிட்​டு உள்​ளோம்​. இந்​த போட்​டிகள்​ குஜ​ராத்​தில்​ நடத்​தப்​படும்​. இவ்​​வாறு பிரதமர்​ நரேந்​திர மோடி பேசி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x