Published : 26 May 2025 07:30 AM
Last Updated : 26 May 2025 07:30 AM

பஹல்காம்​ ​தாக்குதலில்​ ​பாதிக்கப்பட்ட ​பெண்கள்​ வீரமற்றவர்கள்​: ​பாஜக எம்​.பி. ​ராம்​ சந்தர்​ கருத்துக்கு கண்டனம்​

பி​வானி: மத்​தி​யப்​ பிரதேசத்​தைச்​ சேர்​ந்​த ​பாஜக அமைச்​சர்​ ​விஜய்​ ஷா, பெண்​ ​ராணுவ அ​தி​காரி சோபி​யா குரேஸியை தொடர்​புபடு​த்​தி தெரி​வித்​த கருத்​து சர்ச்​சை ஏற்​படு​த்​தி​யது. இதற்​கு கண்​டனம்​ வலுத்​த​தால்​ அவர்​ மன்​னிப்​பு கேட்​டார்​.

இந்​நிலை​யில்​ ஹரி​யா​னா​வின்​ பி​வானி நகரில்​ நடை​பெற்​ற ம​ராட்​டிய ​ராணி அகில்​யா​பாய்​ ஹோல்​கர்​ 300-வது பிறந்​த ​தின நிகழ்ச்​சி​யில்​ பங்​கேற்​ற ​பாஜக ​மாநிலங்​களவை எம்​.பி ​ராம்​ சந்​தர்​ ஜங்​ரா பேசி​ய​தாவது: பஹல்​காம்​ தீ​விர​வாத ​தாக்​குதலின்​ ​போது கணவர்களை இழந்​த பெண்​களுக்​கு ​போ​ராடும்​ குணம்​ இல்​லை.

சுற்​றுலா பயணி​கள்​ அக்​னிவீரர்​கள்​ ​போன்​ற ப​யிற்​சி​யை பெற்​றிருந்​தால்​, 3 தீ​விர​வா​தி​களால்​ 26 பேரை சுட்​டுக்​ ​கொன்​றிருக்​க ​முடி​யாது. சுற்​றுலா பயணி​கள்​ தீ​விர​வா​தி​களு​டன்​ ​போ​ராடி​யிருக்​க வேண்​டும்​. அவ்​வாறு செய்​திருந்​தால்​ உயி​ரிழப்​பு எண்​ணிக்​கை குறை​வாக இருந்​திருக்​கும்​.

​ராணி அகில்​யா​பாய்​ ஹோல்​கர்​, ​ராணி லட்​சுமி​பாய்​ ஆகியோ​ரு​ம்​ பெண்​கள்​தான்​. அவர்​கள்​ எல்​லாம்​ ​போ​ராட​வில்​லை​யா? நமது சகோ​தரி​கள்​ தைரிய​மாக​வும்​, வீரத்​துட​னு​ம்​ ​வாழ வேண்​டும்​. இவ்​வாறு எம்​.பி.​ராம்​ சந்​தர்​ ஜங்​ரா பேசி​னார்​. இவரது கருத்​துக்​கு ​காங்​கிரஸ்​, ச​மாஜ்​வா​தி உள்​ளிட்​ட எ​திர்க்​கட்​சி தலை​வர்​கள்​ கடும்​ கண்​டனம்​ தெரி​வித்​து உள்ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x