Published : 23 May 2025 07:20 AM
Last Updated : 23 May 2025 07:20 AM

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை: அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மீண்டும் திட்டவட்டம்

புதுடெல்லி: இந்​தி​யா- பாகிஸ்​தான் இடையி​லான போர் நிறுத்​தம் சர்​வ​தேச மத்​தி​யஸ்​தத்​தால், குறிப்​பாக அமெரிக்​கா​வின் செல்​வாக்​கால் ஏற்​பட​வில்லை என்று வெளி​யுறவு அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கர் மீண்​டும் திட்டவட்டமாக கூறினார். நெதர்​லாந்து ஊடகம் ஒன்​றுக்கு எஸ்​.ஜெய்​சங்​கர் பேட்டி அளித்​தார்.

அப்​போது அவர் கூறிய​தாவது: பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்​தூர் இன்​னும் தொடர்​கிறது. ஏனென்​றால் அந்த நடவடிக்​கை​யில் ஒரு தெளி​வான செய்தி இருந்​தது. ஏப்​ரல் 22-ம் தேதி நாம் கண்​டது போன்ற செயல்​கள் (பஹல்​காம் தாக்​குதல்) நடந்​தால், அதற்கு பதிலடி தரப்​படும் என்​பது​தான் அது. போர் நிறுத்த முயற்சி மே 10-ம் தேதி பாகிஸ்​தான் ராணுவத்​தால் தொடங்​கப்​பட்​டது. போரை நிறுத்த தயா​ராக இருப்​ப​தாக பாகிஸ்​தான் ராணுவம் ஹாட்​லைனில் கூறியது.

அதற்கு நாங்​கள் எதிர்​வினை​யாற்​றினோம். போர் நிறுத்​தம் முற்​றி​லும் இந்​தியா - பாகிஸ்​தான் பேச்​சு​வார்த்​தை​யால் ஏற்​பட்​டது. சர்​வ​தேச மத்​தி​யஸ்​தத்​தால், குறிப்​பாக அமெரிக்​கா​வின் செல்​வாக்​கால் இது ஏற்​பட​வில்​லை.அமெரிக்க வெளி​யுறவு அமைச்​சர் மார்கோ ரூபியோ என்​னிடம் பேசி​னார். பிரதமர் மோடி​யிடம் துணை அதிபர் ஜே.டி.​வான்ஸ் பேசி​னார். அவர்​களின் பங்கு கவலை தெரி​விப்​ப​தாக மட்​டுமே இருந்​தது.

அமரிக்கா மட்​டுல்ல, எங்​களிடம் பேசிய அனைத்து நாடு​களு​ட​னும் ஒரு விஷ​யத்தை நாங்​கள் தெளி​வாக கூறினோம். பாகிஸ்​தான் போர் நிறுத்​தம் செய்ய விரும்​பி​னால் அதை அந்​நாடு எங்​களிடம் சொல்ல வேண்​டும் என்​பது​தான் அது. பாகிஸ்​தான் ஜெனரல் நமது ராணுவ ஜெனரலை அழைத்து பேசிய பிறகே போர் நிறுத்த உடன்​பாடு ஏற்​பட்​டது. இவ்​வாறு அவர் கூறி​னார்​.

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் தனது தலையீடு இருந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து கூறிவரும் நிலையில் அமைச்சர் ஜெய்சங்கர் அதனை மீண்டும் நிராகரித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x