Published : 16 May 2025 06:08 PM
Last Updated : 16 May 2025 06:08 PM

‘மோடிக்கு ராணுவம் தலைவணங்க வேண்டுமா?’ - ம.பி துணை முதல்வர் பேச்சும், காங்கிரஸ் எதிர்வினையும்

மத்தியப் பிரதேச துணை முதல்வர் ஜெகதீஷ் தேவ்தா | கோப்புப் படம்

போபால்: “பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய ராணுவம் தலைவணங்க வேண்டும்” என்று மத்தியப் பிரதேச துணை முதல்வர் ஜெகதீஷ் தேவ்தா பேசியிருப்பது அரசியல் சர்ச்சையாகியுள்ளது. இந்தப் பேச்சு மலிவானது என கண்டித்துள்ள காங்கிரஸ் கட்சி, மத்தியப் பிரதேச துணை முதல்வர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத் துணை முதல்வர் தேவ்தா பேசிய வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் கட்சி, “நாட்டின் ராணுவம் மற்றும் ராணுவ வீரர்கள், பிரதமர் மோடிக்கு தலைவணங்க வேண்டும் என்று மத்தியப் பிரதேச பாஜக அரசின் துணை முதல்வர் ஜெகதீஷ் தேவ்தா கூறியுள்ளார். அவரின் இந்தப் பேச்சு மலிவானது. வெட்கக்கேடானது. இது ராணுவத்தின் துணிச்சலுக்கும் வீரத்துக்கும் அவமானம். ஒட்டுமொத்த தேசமும் இன்று ராணுவத்தைக் கொண்டாடி வரும் நேரத்தில் பாஜக தலைவர்கள் நமது துணிச்சலான ராணுவத்தைப் பற்றி தாழ்வான எண்ணங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். பாஜகவும், ஜெகதீஷ் தேவ்தாவும் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, கூட்டம் ஒன்றில் பேசும் மத்தியப் பிரதேச துணை முதல்வர் ஜெகதீஷ் தேவ்தா, "அங்கு (பஹல்காம்) சுற்றுலா பயணிகளின் மதம் பற்றிக் கேட்டு பின்பு கொல்லப்பட்டது எனது இதயத்தில் பெரும் கோபமாக இருந்தது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண் முன்பாக அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொல்லப்பட்டனர். நாடு பழிவாங்க விரும்பியது. நாம் பிரதமருக்கு நன்றி கூற வேண்டும். ஒட்டுமொத்த நாடும், ராணுவமும், வீரர்களும் அவருக்கு தலைவணங்குகிறது" என்று தெரிவித்துள்ளார்.

பாஜக எதிர்வினை: காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு எதிர்வினையாற்றியுள்ள மத்தியப் பிரதேச பாஜக ஊடக பிரிவு தலைவர் ஆஷிஷ் அகர்வால், "காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு நாட்டின் மீதும் ராணுவத்தின் மீதும் மரியாதை இல்லை. தங்களுக்கு ஏற்றவாறு வார்த்தைகளையும் உணர்வுகளையும் திரித்துக் கூறுவது அவர்களுக்கு கை வந்தது. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய இந்திய ராணுவம் மற்றும் வீரர்களை நாடு வணங்குகிறது என்று ஜெகதீஷ் தேவ்தா தெளிவாக கூறுகிறார். இதை அரசியலாக்க காங்கிரஸ் விரும்பினால், அவர்கள் அதைச் செய்யட்டும். ஆனால், நமது ராணுவத்தின் துணிச்சல் மற்றும் வீரத்துக்கு தலைவணங்க பாஜக தொண்டர்களும் தலைவர்களும் ஒன்றுபட்டு நிற்போம்" என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ம.பி துணை முதல்வர் ஜெகதீஷ் தேவ்தா மற்றும் ம.பி அமைச்சர் விஜய் ஷா ஆகியோரின் உருவ பொம்மைகளை எரித்து, அவர்கள் பதவி விலக வலியுறுத்தி மத்தியப் பிரதேசம் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவோம் என்று மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜித்து பட்வாரி தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் கண்டனம்: பாகிஸ்​தானுக்கு எதி​ரான ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்கை குறித்து மத்​திய வெளி​யுறவுத் துறை செய​லா​ளர் விக்​ரம் மிஸ்​ரி, கர்​னல் சோபியா குரேஷி, விங் கமாண்​டர் வியோமிகா சிங் ஆகியோர் அவ்​வப்​போது ஊடகங்​களுக்கு பேட்டி அளித்​தனர். இந்​நிலை​யில், மத்​திய பிரதேச மாநில அமைச்​சர் விஜய் ஷா, ராணுவ அதி​காரி கர்​னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்​சைக்​குரிய வகை​யில் கருத்து தெரி​வித்​திருந்​தார். இவரது கருத்​துக்கு எதிர்க்​கட்​சிகள் கடும் கண்​டனம் தெரி​வித்​தன. இந்த விவ​காரத்​தில் தாமாக முன்​வந்து வழக்கு பதிவு செய்த மத்​திய பிரதேச உயர் நீதி​மன்​றம், விஜய் ஷா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து குற்​ற​வியல் நடவடிக்கை எடுக்​கு​மாறு மாநில காவல் துறை தலை​வருக்கு உத்​தர​விட்​டது. இதையடுத்​து, விஜய் ஷா மீது காவல் நிலை​யத்​தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்​யப்​பட்​டது.

இதையடுத்​து, உயர் நீதி​மன்ற உத்​தர​வுக்கு இடைக்​கால தடை விதிக்​கக் கோரி​யும் முன்​ஜாமீன் கோரி​யும் விஜய் ஷா சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மனு தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் தலை​மையி​லான அமர்வு முன்பு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, நீதிப​தி​கள் கூறும்​போது, “அமைச்​சரின் இந்த கருத்து ஏற்​றுக்​கொள்ள முடி​யாதது. அரசி​யலமைப்பு பதவி​யில் இருப்​பவர்​கள் பேச்​சில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். ஒரு நாளில் ஒன்​றும் நடந்​து​வி​டாது. முன்​ஜாமின் வழங்க முடி​யாது. உயர் நீதி​மன்​றத்​தில் அமைச்​சர் மன்​னிப்பு கேட்க வேண்​டும். இந்த மனுவை வெள்​ளிக்​கிழமை வி​சா​ரணைக்​கு எடுத்​துக்​ கொள்​கிறோம்​” என்​றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x