Last Updated : 13 May, 2025 06:41 AM

22  

Published : 13 May 2025 06:41 AM
Last Updated : 13 May 2025 06:41 AM

திருமண ட்ரோன், திறனற்ற ஏவுகணைகளை பயன்படுத்திய பாக்: சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம்

புதுடெல்லி: பஹல்​காம் தாக்​குதலுக்கு பதிலடி​யாக இந்​தியா தாக்​குதல் நடத்​திய போது, திரு​மணங்​களில் வீடியோ எடுக்க பயன்​படும் ட்ரோன்​கள், பயனற்ற ஆயுதங்​கள், திறனற்ற ஏவு​கணை​களை இந்​தியா மீது பாகிஸ்​தான் ஏவிய​தாக சமூக வலை​தளங்களும் உருது நாளிதழ்​களும் விமர்​சனம் செய்​துள்​ளன.

பாகிஸ்​தான் மீது இந்​தியா தாக்​குதல் நடத்​திய போது, பாகிஸ்​தான் பதி​லுக்கு ஏவிய திறனற்ற ஏவு​கணை​கள் இலக்கை தாக்​கு​வதற்கு முன்​பாகவே வெடித்து சிதறி​யுள்​ளன. இது​போல், பயனற்ற ஆயுதங்​களை வைத்து இந்​தி​யா​வுடன் திறமை​யாகப் போர் புரிவ​தாக நாட்டு மக்​களை பாகிஸ்​தான் ஏமாற்றி சமாளித்ததாக உருது நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.

பாகிஸ்​தானுக்​குள்​ளேயே விழுந்து சிதறிய ஏவு​கணை படங்​கள் சமூக வலை​தளங்​களில் வைரலாகி வரு​கின்​றன. ‘‘நல்​ல​வேளை​யாக போர் நிறுத்த அறி​விப்​பால் பாகிஸ்​தான் ராணுவம் தப்​பியது. இந்​தி​யாவை தாக்க பயன்​படுத்​திய அனைத்து ஆயுதங்​கள், ட்ரோன்​கள் மற்​றும் ஏவு​கணை​களின் தோல்வி பாகிஸ்​தானின் உண்​மை​யான முகத்தை காட்​டு​கின்​றன’’ என்று சமூக வலைதள பதி​வில் விமர்​சிக்​கப்​பட்​டுள்​ளது.

மற்​றொரு பதி​வில், ‘‘இங்​கும் அங்​கும் விழுந்த ஏவு​கணை​களில் இருந்து புகையோ அல்​லது வெடிப்போ இல்​லை. இது பாகிஸ்​தான் ராணுவத்​தின் அனுபவ​மின்​மை​யை​யும் அம்​பலப்​படுத்​தி​யது. இது​தான், பாகிஸ்​தான் ராணுவத்​தின் புதிய நிலை’’ என்று கூறப்​பட்​டுள்​ளது.

கடந்த 8 மற்​றும் 9-ம் தேதி​களில் இந்​தி​யா​வின் 36 ராணுவ தளங்​களை குறி வைத்து பாகிஸ்​தான் 300 முதல் 400 ட்ரோன்​களை அனுப்​பியது. ஆனால், அவை அனைத்​தை​யும் இந்​திய ராணுவம் மிக எளி​தாக சுட்டு வீழ்த்​தி​யது. அதன்​பின் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில், இந்​தியா மீது ஏவிய அனைத்து ட்ரோன்​களும் துருக்​கி​யின் ஆசிஸ்​கார்ட் சோங்​கர் ட்ரோன் என்​பது தெரியவந்​தது.

இந்த ட்ரோன்​களில் பெரும்​பாலானவை திரு​மணங்​களில் வீடியோ எடுக்க பயன்​படுத்​தப்​படு​வது போலஇருந்​த​தாக இந்​திய ராணுவ அதி​காரி​கள் தெரி​வித்தனர். ஆபரேஷன் சிந்​தூருக்​குப் பிறகு, பாகிஸ்​தான் இளைஞர் ஒரு​வர் வெளி​யிட்ட வீடியோ சமூக ஊடகங்​களில் வைரலானது. அதைப் பார்த்த பாகிஸ்​தானியர்​கள், தங்​கள் நாட்டு ராணுவத்​தின் மீது மிக​வும் கோபமடைந்​தனர்.

கடந்த 2022-ம் ஆண்டு பாகிஸ்​தான் நடத்​திய சோதனை​யின் போது ஒரு குறுகிய தூர ஏவு​கணை விபத்​துக்​குள்​ளாகி கிராம​வாசிகள் சிலர் காயமடைந்​தனர். அதே​போல் கடந்த 2024-ம் ஆண்டு சோதனை​யின் போதும், ஒரு ஏவு​கணை இலக்​கைத் தவற​விட்டு வானில் வெடித்து சிதறியது.
இவற்​றின் மூலம் பாகிஸ்​தானின் பெரும்​பாலான ஆயுதங்​கள் முற்​றி​லும் பயனற்​றவை என்று அந்​நாட்டு நிபுணர்​கள் கூறி​யுள்​ளனர்.

ஆயுதங்​கள் தோல்​வியடை​யும் போது, பொது​மக்​களை ஈர்க்க ‘அல்​லாஹு அக்​பர்’ என பாகிஸ்​தான் ராணுவ அதி​காரி​கள் ஆன்​மிக கோஷமிடும் டிக் டாக் வீடியோக்​களை உரு​வாக்கி வைரலாக்கி வரு​கின்​றனர். இது​போன்​ற நாடகத்​தின்​ பின்​னணி​யில்​ ராணுவ தளப​தி ஜெனரல்​ ஆசிம்​ முனீர்​ இருப்​ப​தாக குற்​றச்​சாட்​டு எழுந்​துள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x